சென்னை வியாசர்பாடி முல்லை நகர் அருகே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 9 ஆம் வகுப்பு மாணவியை வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கஞ்சா போதை ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் அதிமுக பகுதிச் செயலாளர் அவரது மகள் அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்தச் சிறுமி பள்ளி செல்வதற்காக முல்லை நகர் இடுகாடு வழியே சென்று கொண்டிருந்தார்.
அங்கே கஞ்சா போதையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் அந்த மாணவியை சைகை காட்டி வழிமறித்து தகாத வார்த்தை பேசி அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்தச் சிறுமி கத்திக் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து கஞ்சா போதை நபருக்கு தர்ம அடி கொடுத்து மகாகவி பாரதி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் பெயர் சுந்தர் எனவும் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கஞ்சா போதையில் இருந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
This website uses cookies.