சென்னை பாரிமுனை அருகே, காரை சென்டர் மீடியனில் மோத விட்ட கார் ஓட்டுநர், மது போதையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பாரிமுனை முத்துசாமி பாலம் அருகே, மாலை 3 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்ததில், சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போக்குவரத்து போலீசார், கார் ஓட்டுநரை பத்திரமாக மீட்டனர்.
விபத்து ஏற்படுத்தியவரை விசாரித்த போது, அவரது பெயர் தரணி என்றும் அவர் அதிகளவில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதும் தெரியவந்தது. அத்துடன் தகுந்த ஆவணங்களைத் தராமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அத்துடன், தான் பாஜகவை சேர்ந்தவர் என்பதாலேயே தன்னை அவமானப் படுத்துவதாக புலம்பித்தள்ளினார்.தான் எந்த தவறும் செய்யவில்லை எனக் குமுறிய அந்த போதை ஆசாமி, இங்கேயே தூக்கு மாட்டிக் கொள்வேன் எனக் கூறி போலீசாரை மிரட்டினார்.
மேலும் அண்ணாமலை ஐயா நீங்கதான் கேட்கணும் எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு எனக் கூறி அதிரச் செய்தார்.
ஒரு வழியாக காரை அப்புறப்படுத்தி, போதை ஆசாமியை அனுப்பி வைத்த நிலையில், குடி போதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்கான அபராதம் விதித்துள்ளதாக போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.