சென்னை : சென்னையில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை சென்னை கொருக்குப் பேட்டையில் இருந்து வியாசர்பாடி வழியாக சரக்கு பெட்டக ரயிலின் என்ஜின் சென்றுள்ளது. அப்போது, தண்டவாளத்தின் மீது இளைஞர்கள் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனைக் கண்ட ஓட்டுநர், அவர்களை விலகச் செய்வதற்காக, ஒலிபெருக்கியை ஒலிக்க செய்துள்ளார்.
அதில், மது போதையில் இருந்த ஒரு இளைஞர், தண்டவாளத்தில் இருந்த கற்களை எடுத்து ரயில் மீது வீசி ஓட்டுநரை தாக்கியுள்ளார்.
அந்த இளைஞரின் நண்பர்கள் தடுத்தும் கூட, நிற்க முடியாத அளவுக்கு போதையில் இருந்த அந்த நபர், கற்களை வீசி தாக்கியுள்ளார். இதில், ரயிலின் முன்பக்க கண்ணாடி உடைந்து ஓட்டுநரின் கையில் வீக்கம் ஏற்படும் அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
போதை ஆசாமியின் இந்த அராஜகத்தை ஓட்டுநர் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். இந்த வீடியோ காட்சியின் அடிப்படையில், கொருக்குப்பேட்டை மத்திய இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.