சென்னை : சென்னையில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை சென்னை கொருக்குப் பேட்டையில் இருந்து வியாசர்பாடி வழியாக சரக்கு பெட்டக ரயிலின் என்ஜின் சென்றுள்ளது. அப்போது, தண்டவாளத்தின் மீது இளைஞர்கள் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனைக் கண்ட ஓட்டுநர், அவர்களை விலகச் செய்வதற்காக, ஒலிபெருக்கியை ஒலிக்க செய்துள்ளார்.
அதில், மது போதையில் இருந்த ஒரு இளைஞர், தண்டவாளத்தில் இருந்த கற்களை எடுத்து ரயில் மீது வீசி ஓட்டுநரை தாக்கியுள்ளார்.
அந்த இளைஞரின் நண்பர்கள் தடுத்தும் கூட, நிற்க முடியாத அளவுக்கு போதையில் இருந்த அந்த நபர், கற்களை வீசி தாக்கியுள்ளார். இதில், ரயிலின் முன்பக்க கண்ணாடி உடைந்து ஓட்டுநரின் கையில் வீக்கம் ஏற்படும் அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
போதை ஆசாமியின் இந்த அராஜகத்தை ஓட்டுநர் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். இந்த வீடியோ காட்சியின் அடிப்படையில், கொருக்குப்பேட்டை மத்திய இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.