இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளருக்கு ஆயிரம் பேரு இருக்காங்க… ஆனால், எங்களுக்கு வில்லன் மோடி மட்டும் தான் ; துரை வைகோ…!!

இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அதிகம் பேர் உள்ளதாகவும், ஆனால் எங்களுக்கு வில்லன் என்பது மோடி மட்டும்தான் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக முதன்மை செயலாளர் துரை. வைகோ கூறியதாவது :- வெள்ள பாதிப்பு அதிக அளவு இருந்ததால் ஒரு ஆதங்கத்தில் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். மக்கள் நலனில் அக்கறை அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் அந்த கருத்தை தெரிவித்தார். மத்திய அரசு நிவாரணத் தொகைகளை வழங்க வேண்டும் என்று ஆதங்கத்தில் தான் அமைச்சர் உதயநிதி அவர்கள் போன்று பேசினார். இதை நான் தவறாக எண்ணவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டுமே நிவாரணமாக பத்தாயிரம் கோடி தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தேசிய பேரிடர் நிதியிலிருந்து 1100 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். அரசியலைக் கடந்து அந்த பகுதி மக்கள் சகஜ நிலைக்கு வர வேண்டும் என்று அனைவரும் நினைக்க வேண்டும். தமிழக முதலமைச்சர வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசிடம் உதவி கேட்கிறார். அந்த நேரத்தில் ஒரு மத்திய அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் மத்திய அரசு ஆகியவை அந்த பகுதி மக்களுக்கு சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என்று நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். தமிழிசை சௌந்தர்ராஜன் மதிப்புமிக்க பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் வேறொரு மாநிலத்தின் ஆளுநராக உள்ளார். கால நிலவரத்தை உணர்ந்து அவர் பேசாதது துரதிஷ்ட வசமானது.

களநிலவரத்தை ஆய்வு செய்வதற்கு தற்போது மத்தியில் இருந்து வருகின்றனர். ஆனால், சம்பவம் நடந்தபோது மத்தியில் இருந்து எந்த ஒரு அமைச்சரும் வராதது ஏன்..? மணிப்பூர் பிரச்சனையில் மத்தியில் இருந்து எந்த ஒரு அமைச்சரும் போகாதது ஏன்…? வட மாநிலத்தவர் குறித்து தயாநிதி மாறன் பேச்சு திரித்து கூறப்பட்டது. அதில் உண்மை இல்லை. அவர் எந்த ஒரு தவறான வார்த்தையும் பயன்படுத்தவில்லை. அவருடைய கருத்தை நான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன்.

தமிழகத்திலிருந்து செல்பவர்கள் ஆங்கிலம் தெரிவதால் நாம் அங்கு தமிழகத்திலிருந்து செல்பவர்களுக்கு எளிதாக வேலை வாய்ப்பு பெற முடிகிறது. ஆனால், வட மாநிலத்தவர்கள் ஹிந்தியை மட்டும் தெரிந்து இருந்ததால், அவர்கள் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதைத்தான் தயாநிதி மாறன் கூறினார். ஆனால் அவருடைய கருத்தை திரித்து தேர்தல் ஆதாயத்திற்காக பாஜகவினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இதை வடநாட்டில் அதிக அளவு பாஜகவினர் பரப்புரை செய்கின்றனர். தமிழக பாஜகவும் இந்த கருத்தை திரித்து பிரச்சாரம் செய்கின்றனர். சமீபத்தில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் நிதீஷ் குமார் ஹிந்தி குறித்து கூறிய கருத்திற்கு, தமிழக முதல்வரும், அமைச்சரும் நாகரிகம் கருதியும், கூட்டணிக்குள் எந்த விதமான குழப்பமும் வந்து விடக்கூடாது என்பதற்காக எந்தவிதமான எதிர்மறை கருத்துக்களும் கூறாமல் அமைதி காத்தனர்.

பிரதமர் வேட்பாளராக இண்டியா கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் ராகுல் காந்தியை முன்னிறுத்தவில்லை என்பது உண்மைதான். கூட்டணியை பொறுத்தவரை தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தான் தலைவராக உள்ளார். எங்களை பொறுத்தவரை பிரதமராக யார் வர வேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பது தான் முக்கியம். அதுதான் எங்களுடைய இலக்கு.
இந்தியாவின் வில்லன் மோடி. அவர் வரக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். இண்டியா கூட்டணியில் கதாநாயகர்கள் நிறைய பேர் உள்ளனர்.

துரை வைகோ தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இதுவரை முடிவு செய்யவில்லை. எங்களுடைய கட்சி எடுக்கும் முடிவு தான் அது, எனக் கூறினார்.

இயற்கை பேரிடர்கள் வரும்போது முதலில் மக்களை காக்க வேண்டியது மாநில அரசின் கடமை மத்திய அரசை குறை கூறுவது தவறு என்று ஆந்திர அமைச்சர் ரோஜா கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த துரை வைகோ, அது அவருடைய கருத்து அவரது கேள்விக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை, எனக் கூறினார்.

தமிழக முதல்வரிடம் பிரதமர் மோடி தொடர்பு கொண்டு மத்திய அரசு இயற்கை பேரிடர் நாங்கள் உங்களுக்கு உதவியாக இருப்போம் என்று கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், அதை பிரதமர் செயலில் காட்ட வேண்டும், என்றார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் : சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…

40 minutes ago

திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ

எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

43 minutes ago

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?

அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…

1 hour ago

வெளிநாட்டுக்கு ஜாலி ட்ரிப் அடித்த நட்சத்திர ஜோடி.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டீங்களே!

சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…

1 hour ago

வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…

யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…

2 hours ago

கசிந்த தகவல்..அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…

3 hours ago

This website uses cookies.