தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தீவிர கடவுள் பக்தி உள்ளவர். இவரது குடும்பத்தில் இவரை தவிர அனைவருமே கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்.
இருப்பினும், துர்கா ஸ்டாலினுக்காகவே வீட்டில் பூஜை அறை அமைக்கப்பட்டு தினமும் வழிபட்டு வருவதாக பல்வேறு நேர்காணலில் துர்கா ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் மேல் ஒரு விமர்சனம் எப்போதும் வைக்கப்பட்டு வருகிறது. அது எப்போதும் இவர் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மாட்டார்.
ஆனால் அவர் மனைவியோ பிரசித்த பெற்ற கோவில்களில் வழிபடுவது, பால்குடம், காவடி தூக்குவது என ஆன்மீகத்தில் மூழ்கியுள்ளார்.
துர்காவையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தாலும், அவரது ஆன்மீக பயணம் எப்போதும் போல தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.
இந்த நிலையில் திருவொற்றியூரில் உள்ள தியாதராஜ சாமி கோவிலுக்கு வந்த துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார்.
அப்போது வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால், அவருடன் வந்தவர்கள் துர்கா ஸ்டாலினுக்கு குடை பிடித்துக்கொண்டே பின் தொடர்ந்தனர். இதில் என்ன சர்ச்சை என்றால், ஒருவர் சாதாரண மழைக்குடையை பிடித்திருக்க, மற்றொருவர், சாமி சிலைக்கு பிடிக்கப்படும் பெருமாள் குடையை துர்கா ஸ்டாலினுக்கு பிடித்தவாறு பின்தொடர்ந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். மேலும் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்கள் முன் வைத்து வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.