டிரெண்டிங்

மருதமலைக்கு செல்ல எதற்கு இ-பாஸ்? பக்தர்கள் கேள்விக்கு கோவில் நிர்வாகம் விளக்கம்..!!!

கோவை அடுத்த மருதமலை சுப்பிரமணி சாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாநில பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு பைக் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்கின்றனர். கோவிலில் போதிய இடவசதி இல்லாததால் அதிக அளவில் வாகனங்களை நிறுத்த முடியவில்லை.

மேலும் படிக்க: அதிகாலையில் அலறிய குழந்தைகள்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் : நள்ளிரவில் நடந்த கொடூரம்!

இதன் காரணமாக முக்கிய விசேஷ நாட்களில் இந்து சமய அறநிலைத் துறை சார்பில் கார், நான்கு சக்கர வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, கோவில் பேருந்தில் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்து சமய அறநிலைத் துறை சார்பில் அறங்காவலர் குழு சார்பில் மலைப் பாதையில் செல்ல கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்து செல்ல அறங்காவலர் குழு சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

அதன்படி காலை 6:00 மணி முதல் மதியம் 1 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும் மதியம் ஒரு மணி முதல் மாலை 6:00 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களுக்கு என நாளொன்றுக்கு 300 சக்கர வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும் இ.பாஸ் நடைமுறை குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் பொதுமக்கள் கோவில் அலுவலகத்திற்கு தபால் மூலம் அல்லது இணையதளம் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கோயில் துணை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

11 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

12 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

12 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

12 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

13 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

13 hours ago

This website uses cookies.