தமிழகம் முழுவதும் சுமூகமான முறையில் தேர்தல் நடத்து முடிந்துள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 7 மணி வரை பதிவான வாக்குகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
மேலும் படிக்க: அசந்த நேரத்தில் திமுகவுக்கு ஓட்டு.. 105 வயது மூதாட்டியுடன் அதிகாரிகளை சிறைபிடித்த பாஜக ; கோவையில் பரபரப்பு
அப்போது பேசிய அவர் கூறியதாவது :- 7 மணி வரை 72.09% வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது. ஒரு சில இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களித்து வருகிறார்கள். அதிகப்படியாக கள்ளக்குறிச்சி 75.76%, மற்றும் தருமபுரி 74.44% மற்றும் குறைந்தபட்சம் மத்திய சென்னை 67.35% பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக
தென் சென்னை 67.85% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த முறையை விட இப்போது அதிகரித்துள்ளது
கடந்த 2019 ஆம் ஆண்டு 69% இருந்தது. இப்போது 72.09% ஆக உள்ளது. கடைசி வாக்காளர் வரை வாக்கு அளித்த பின்னர், நாளை 12 மணிக்கு இறுதி விபரங்கள் அளிக்கப்படும். தேர்தல் ஆணையத்திலிருந்து ஒரு தகவல் வந்துள்ளது. தேர்தல் நடைபெறும் அண்டை மாநில எல்லைகளில் தற்பொழுது உள்ள நிலை தொடரும்.
வாக்கு இயந்திரம் தொடர்பான புகார் பெரிதாக வரவில்லை. ஒரு கட்சியிலிருந்து மட்டும் புகார் அளித்துள்ளார்கள். அது குறித்து உரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். வாக்கு பதிவு இயந்திரங்களிலும் சரி பொது பிரச்சனையும் சரி பெரிதாக இல்லை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் சுமூகமான முறையில் தேர்தல் நடைபெற்றது. நிலையான கண்காணிப்பு குழுவும் தேர்தல் பறக்கும் படையும் திரும்ப பெறப்படுகிறது தேர்தல் நடைபெறும் அண்டை மாநில எல்லைகளில் மட்டும் இப்பொழுது உள்ள நிலை , நிலை தொடரும் என கூறினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.