திண்டுக்கல் ; வேடசந்தூர் திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் விடிய விடிய அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா சாமிநாதன். இவர் பழனி அருகே உள்ள புஷ்பத்தூரில் சி.பி.எஸ்.சி பள்ளி நடத்தி வருவதுடன், தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார். தொழிலதிபரான இவர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருக்கமாக இருந்தாக கூறப்படுகிறது.
நேற்று மதியம் 2 மணி அளவில் இரண்டு கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ள சாமிநாதனின் வீட்டிலும், வேடசந்தூரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் தமுத்துபட்டியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் நேற்று காலை 11 மணியில் இருந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வீட்டில் வீராசாமிநாதன் அவர்களின் தாயார் சரஸ்வதி மட்டுமே இருந்தார். அவரிடம் செல்போனை வாங்கி வைத்துக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மாலை ஆறு முப்பது மணி வரை சோதனை செய்துவிட்டு அவரிடம் கையெழுத்து பெற்றுவிட்டு கிளம்பினார்.
கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே மீண்டும் தமுத்துப்பட்டியில் உள்ள தோட்டத்தை பங்காளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் சென்று விசாரணை நடத்தினர். அதன்பிறகு வீட்டில் 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டில் இருந்த திமுக கட்சி நிர்வாகிகளை அப்புறப்படுத்தி வாயில் கதவை சாத்தினர். அதனைத்தொடர்ந்து, தோட்டத்து பங்களாவில் இருந்த லாக்கர் சாவி இல்லாத காரணத்தால் நீண்ட நேரம் காத்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் லாக்கர் சாவி எடுத்து வர கூறினர். அதன் பிறகு கோவையில் இருந்து வீராசாமிநாதனின் பணியாளர் சூர்யா காரில் கொண்டு வந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
லாக்கர் சாவியை கைப்பற்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரவில் விடிய விடிய சோதனை நடத்தி வந்தனர். 15 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தோட்டத்து பங்களாவில் நேற்று காலை 11 மணியிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணி வரை கிட்டத்தட்ட 18 மணி நேர சோதனை நிறைவு பெற்றது. சோதனை முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
This website uses cookies.