அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்களுக்கு மரணஅடி கொடுக்கும் விதமாக ஐடி விங் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, அவர் பேசியதாவது :- நாமக்கல் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்று நிரூபித்தவர் முன்னாள் அமைச்சர் தங்கமணி. எதிரிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தும் விதமாக ஐடி விங் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். அதிமுக ஆட்சியின் சாதனைகளை சமூக வலைதளங்கள் வாயிலாக கொண்டு சேர்ப்பது உங்களின் கடமை.
சமூகவலைதளங்களில் நமக்கு எதிராக மாற்றுக்கட்சியினர் செய்யும் செயல்களை முறியடிக்க வேண்டும். அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்களுக்கு மரணஅடி கொடுக்கும் விதமாக ஐடி விங் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். அதிமுக மக்களுக்கான இயக்கம்.
இன்றைய ஆட்சியாளர்கள் பணத்தை நம்பியே உள்ளனர். நாம் மக்களை நம்பி உள்ளோம். அதிமுக தான் ஜனநாயகக் கட்சி. திமுக வாரிசு கட்சி. தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தோம். திமுகவின் ராசியால் தான் இண்டியா கூட்டணி தொடர்ந்து வலிமை இழந்து வருகிறது. வசனங்களை பேசி மக்களை ஏமாற்றி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின், எனக் கூறினார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.