நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியான உத்தரவை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக, 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. வேட்பாளர் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் அறிக்கையையும் வெளியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாளை முதல் பிரச்சாரத்தையும் தொடங்க இருக்கிறார்.
திருச்சியில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தில் 40 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றனர்.
40 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை வடக்கு தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், சென்னை தெற்கு தேர்தல் பொறுப்பாளராக கோகுல இந்திரா, காஞ்சிபுரம் பொறுப்பாளராக பா.வளர்மதி, அரக்கோணம் பொறுப்பாளராக கே.சி.வீரமணி, வேலூர் பொறுப்பாளராக தம்பிதுரை, கிருஷ்ணகிரிக்கு கேபி முனுசாமி, தருமபுரிக்கு கே.பி.அன்பழகன், திருவண்ணாமலை மற்றும் ஆரணிக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோரும், விழுப்புரம் தொகுதிக்கு சி.வி சண்முகமும், நாமக்கல் தொகுதிக்கு தங்கமணியும், ஈரோடு மற்றும் திருப்பூர் தொகுதிக்கு செங்கோட்டையனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், திண்டுக்கல் தொகுதிக்கு திண்டுக்கல் சீனிவாசன், தேனி மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளுக்கு ஆர்பி உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி, பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணாமலை போட்டியிடும் கோவைக்கும், எல்.முருகன் போட்டியிடும் நீலகிரிக்கும், கொங்கு மண்டலத்தில் பெரும் செல்வாக்கு உள்ள எஸ்பி வேலுமணி, சிம்மசொப்பனமாக திகழ்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதையும் படியுங்க: சண்ட போட்டு…
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
This website uses cookies.