நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார தேதியை அறிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும், தேமுதிக, பாமகவுடனான அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்து வந்தது. பாமக, பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்து விட்ட நிலையில், தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகளை கொடுத்து கூட்டணியை உறுதி செய்ய அதிமுக முடிவு செய்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி உறுதியாகாவிட்டாலும், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால், பிரச்சாரத்தில் ஈடுபட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
அதன்படி, திருச்சியில் வரும் 24ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கும் அவர், முதல்கட்டமாக 30ம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், நாமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக தேர்தல் பிரச்சார அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.