நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார தேதியை அறிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும், தேமுதிக, பாமகவுடனான அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்து வந்தது. பாமக, பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்து விட்ட நிலையில், தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகளை கொடுத்து கூட்டணியை உறுதி செய்ய அதிமுக முடிவு செய்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி உறுதியாகாவிட்டாலும், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால், பிரச்சாரத்தில் ஈடுபட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
அதன்படி, திருச்சியில் வரும் 24ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கும் அவர், முதல்கட்டமாக 30ம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், நாமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக தேர்தல் பிரச்சார அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
This website uses cookies.