நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டு, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் கூட்டணிகள் திசைமாறுமா..? என்று கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சியின் மாநில தலைமை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கட்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு சட்டமன்ற தொகுதிகளை பிரித்து, புதிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரமும், பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை தமிழ்ச்செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கும் புதிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அதிமுகவில் பெண் ஒருவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக ஜெயசுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல, அதிமுக தகவல் தொழிலநுட்பப் பிரிவு தலைவராக சிங்கை ஜி ராமச்சந்திரனும், துணைத் தலைவர்களாக ராஜராஜசோழன், கௌரி சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். செயலாளராக விவிஆர் ராஜ் சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல, மாநில பொறுப்புகளுக்கும், கட்சியின் பிற அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், கட்சியை பலப்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளை மாற்றம் செய்தும், நியமித்தும் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.