நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டு, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் கூட்டணிகள் திசைமாறுமா..? என்று கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சியின் மாநில தலைமை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கட்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு சட்டமன்ற தொகுதிகளை பிரித்து, புதிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரமும், பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை தமிழ்ச்செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கும் புதிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அதிமுகவில் பெண் ஒருவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக ஜெயசுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல, அதிமுக தகவல் தொழிலநுட்பப் பிரிவு தலைவராக சிங்கை ஜி ராமச்சந்திரனும், துணைத் தலைவர்களாக ராஜராஜசோழன், கௌரி சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். செயலாளராக விவிஆர் ராஜ் சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல, மாநில பொறுப்புகளுக்கும், கட்சியின் பிற அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், கட்சியை பலப்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளை மாற்றம் செய்தும், நியமித்தும் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.