நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தின் 22ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், வழக்கம் போல குளிர்காலக் கூட்டத் தொடருக்கான இரு அவைகளும் இன்று காலை கூடியது. அப்போது, மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அத்துமீறி எம்பிக்கள் அமரும் பகுதிக்குள் 2 பேர் நுழைந்துள்ளனர்.
மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து கலர் புகைக்குண்டுகளை மர்ம நபர்கள் வீசியதால் பரபரப்பு நிலவியது. எம்பிக்களின் இருக்கைகள் மீது ஏறி குதித்து கூச்சலிட்ட இருவரையும் அவை காவலர்கள் மடக்கி பிடித்தனர். 2 மர்மநபர்கள் அத்துமீறி நுழைந்ததால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், இரு மர்ம நபர்கள் மக்களவைக்கு புகுந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
இதனிடையே, நாடாளுமன்றத்திற்குள் புகுந்த சம்பவம் தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த நீலம், மகாராஷ்டிராவைச் சேர்ந்த அனமோல் ஷிண்டே மற்றும் சாஹர் என்பவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மைசூரைச் சேர்ந்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, இவர்களை பார்வையாளர்களாக அனுமதிக்கக்கோரிய பரிந்துரை கடிதம் கிடைத்தது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்திற்குள் விதிகளை மீறி நுழைந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனைக்குரியது.
இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன், இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன், என வலியுறுத்தியுள்ளார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.