சென்னை : அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய போது ஓ.பன்னீர்செல்வம் குரல் கொடுக்காததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையின் போது காயமடைந்த அதிமுக தொண்டர்களை, அரசு மருத்தவமனைக்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் நுழைவதாக தகவல் வந்த உடன் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. ரவுடிகளை அழைத்து வந்து கட்சியினரை ஓ.பன்னீர்செல்வம் தாக்கியது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க.வில் உயர்ந்த பதவியை வகித்த ஓ.பன்னீர் செல்வம் செய்தது மிகப்பெரிய துரோகம் .காவல்துறையினர் ரவுடிகளுடன் சேர்ந்து கட்சியினரை தாக்கி உள்ளனர். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு சீல் வைத்துள்ளனர்.
எந்த ஒரு தலைவராவது தனது கட்சியினரை தாக்குவார்களா? ஓ.பன்னீர் செல்வத்தை முதலமைச்சர், துணை முதலமைச்சர், ஒருங்கிணைப்பாளராக ஆக்கியதற்கு அவர் தகுந்த வெகுமதியை தந்துள்ளார். அடிபட்ட நிர்வாகிகள் தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவி தந்தது; அவர்களை கொடூரமான முறையில் தாக்கியுள்ளார் அவர். ஓபிஎஸ் ஒரு தலைவரா..? கேவலம், எனக் கூறினார்.
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
This website uses cookies.