அறிவித்த நிவாரணம் போதாது… இளம் அர்ச்சகர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்குக : தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை : குளத்தில் மூழ்கி உயிரிழந்த இளம் அர்ச்சகர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சென்னை நங்கநல்லூரில் இளம் அர்ச்சகர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவர் சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசியதை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதாவது :- மாண்புமிகு பேரவைத்தலைவர்‌ அவர்களே, நேற்று (56.4.2023) பங்குனி உத்திரத்தை தமிழ்நாடெங்கும்‌ முருகன்‌ திருக்கோயில்களில்‌ சிறப்பு பூஜைகள்‌, தேரோட்டம்‌ மற்றும்‌ தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிகள்‌ நடைபெற்றன. சென்னை நங்கநல்லூரில்‌ வரலாற்று பெருமை வாய்ந்த அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர்‌ திருக்கோயிலிலும்‌ பங்குனி உத்திர திருவிழா காலை முதலே சிறப்பாக நடைபெற்றது. அதில்‌ ஒரு நிகழ்ச்சியாக தீர்த்தவாரி நிகழ்ச்சி அக்கோயிலில்‌ இருந்து 500 மீட்டர்‌ தூரமுள்ள மூவரசம்பட்டு என்ற இடத்தில் உள்ள குளத்தில்‌ நடைபெறுவது வழக்கம்‌. அக்குளம்‌ 20 அடி ஆழம்‌ கொண்டது. ஓரளவு தண்ணீர்‌ உள்ளது. குளத்தின்‌ அடிப்பகுதியில்‌ சேரும்‌, சகதியும்‌ உள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கம்‌ போல்‌ நேற்று காலை 9.30 மணியளவில்‌ சுமார்‌ 20 அர்ச்சகர்கள்‌ சாமி சிலைகளை பல்லக்கில்‌ தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக அக்குளத்திற்கு அர்ச்சகர்கள்‌ எடுத்து வந்தனர்‌.அக்குளத்தில்‌ அர்ச்சகர்கள்‌ இறங்கி சாமி சிலைகளை தண்ணீரில்‌ நீராட முயன்ற போது, ஒரு அர்ச்சகர்‌ கால்‌ வழுக்கி தவறி குளத்தில்‌ உள்ள தண்ணீரில்‌ விழுந்தார்‌. அவருக்கு நீச்சல்‌ தெரியாததால்‌ தண்ணீரில்‌ மூழ்கத்‌
தொடங்கியதை பார்த்த மற்ற அர்ச்சகர்கள்‌ ஒருவர்‌ பின்‌ ஒருவராக அவரை காப்பாற்ற முயன்றனர்‌.

ஆனால்‌ காப்பாற்ற முயன்றவர்களும்‌ ஒருவர்பின்‌ ஒருவராக குளத்தில்‌ மூழ்கத்‌ தொடங்கியதைத்‌ தொடர்ந்து, அங்கு இருந்த மற்றவர்கள்‌ அருகில்‌ இருந்த நீச்சல்‌ தெரிந்தவர்களை உதவிக்கு அழைத்தனர்‌. ஆனால்‌ அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. நீரில்‌ மூழ்கிய ஐவரும்‌ இறந்துவிட்டனர்‌.

அதைத்‌ தொடர்ந்து தீயணைப்பு மற்றும்‌ மிட்புத்‌ துறை அழைக்கப்பட்டு அவர்கள்‌ மீட்பு பணியில்‌ ஈடுபட்டனர்‌. இறுதியாக இறந்தவர்களின்‌ உடல்கள்‌ மீட்கப்பட்டன.

  1. சூர்யா, நங்கநல்லூர்‌.
  2. ராகவ்‌, மடிப்பாக்கம்‌
  3. யோகேஷ்வரன்‌, கீழ்கட்டளை.
  4. ராகவ்‌, நங்கநல்லூர்‌.
  5. பானேஷ்‌, நங்கநல்லூர்‌.

மேற்கண்ட ஐந்து நபர்களும்‌ 24 வயதிற்கு உட்பட்டவர்கள்‌ என்று தெரிய வருகிறது. திருக்கோயில்களுக்கு சொந்தமான குளங்களையும்‌, திருக்கோயில்‌ நிகழ்ச்சிகள்‌ நடைபெறும்‌ குளங்களையும்‌ தூர்வாரும்‌ பணிகளை உடனடியாக இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்‌. மேலும்‌ இளம்‌ வயதிலே இறந்த ஐவருக்கும்‌ அரசு அறிவித்த நிவாரணம்‌ போதாது. நிவாரனத்‌ தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்‌ என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்‌.

இதுபோலவே விழுப்புரம்‌ மாவட்டம்‌, மயிலம்‌ அருள்மிகு முருகர்‌ திருக்கோயிலில்‌ நாராயணன்‌ என்ற 45 வயதுள்ள பக்தர்‌ ஒருவர்‌ அங்குள்ள குளத்தில்‌ குளித்தபோது குளத்தில்‌ மூழ்கி இறந்துள்ளார்‌ என்று செய்திகள்‌ வந்துள்ளன. இவருக்கும்‌ அரசு தகுந்த நிவாரணம்‌ வழங்க வேண்டும்‌ என்று வற்புறுத்துகிறேன்‌. ஆபத்தில்‌ உயிரிழந்தவர்களை இழந்து வாடும்‌, அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கல்களையும்‌, வருத்தத்தையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Share
Published by
Babu Lakshmanan

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

9 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

9 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

10 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

10 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

10 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

10 hours ago

This website uses cookies.