அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கண்டனத்தை தொடர்ந்து, சில மணி நேரத்தில் தண்ணீர் வந்ததால், பட்டியல் இன மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே வெங்கடாம்பட்டி 6வது வார்டில் பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 21-22ம் நிதியாண்டில், 5.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன.
ஆனால், இந்தப் பணிகள் நிறைவடையாததால், முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிக்க குடிநீர் வேண்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பட்டியலின மக்கள் என்பதால் தங்கள் பகுதி மக்களுக்கு குடிக்க கூட தண்ணீர் தர மறுப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அவர் விடுத்த அறிக்கையில், இந்த அவலங்களைப் பற்றி தி.மு.க.வின் கூட்டணியில் அங்கம் வகிக்கும், பட்டியலின மக்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்பவர்களும், அனைவரும் சமம் என்று பேசும் பொதுவுடைமைவாதிகளும் வாய்மூடி மவுனமாக இருப்பது விந்தையாக உள்ளது. தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்தால், அ.தி.மு.க. வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்காது என்று இந்த விடியா தி.மு.க. அரசை எச்சரிக்கிறேன், என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சில மணி நேரத்தில் அந்த பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.