ஒரு மழைக்கே தாங்க முடியாத நிலையில் சென்னை இருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். கே.பி.கே. நகர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க அதிமுக தொண்டர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- அதிமுக ஆட்சிக் காலத்தில் பருவமழை தொடங்கும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் திட்டமிட்டு செயல்படாததே மக்களின் இன்னல்களுக்கு காரணம். வானிலை ஆய்வு மையம் அறிவித்த பிறகு கூட தற்போதைய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ளாததால் சென்னை மற்றும் புறநகரில் நீர் தேக்கம்.
மழை வந்த பின் நிவாரணப் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். மக்கள் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர் ; ஒரு மழைக்கே தாங்க முடியாத நிலையில் சென்னை உள்ளது. ரூ.4,000 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைத்திருப்பதாக முதலமைச்சர், அமைச்சர்கள் கூறி வந்தனர். எல்லாம் செய்து விட்டதாக அமைச்சர்கள் கூறும் நிலையில், மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. எப்போது மோட்டார் வாங்கி எப்போது தண்ணீரை வெளியேற்றப் போகிறார்கள்..?, எனக் கூறினார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.