அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேச அண்ணாமலைக்கு அதிகாரம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் சென்னையில் இருந்து சேலத்திற்கு வருகை தந்தார். பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக சேலம் வந்த அவருக்கு மாவட்ட எல்லையில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர். திருவாக்கவுண்டனூர் பகுதியில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அழைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் சேலம் மாநகரின் மையப் பகுதியில் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, நிகழ்விடத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம், கும்ப மரியாதை என உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூட்டணி குறித்து முடிவு செய்வது மத்தியில் உள்ளவர்களே தவிர, மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல என்றும், அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டதாக தெரிவித்தார். மேலும், அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒரு சிலரை தவிர, மற்றவர்கள் மீண்டும் தாய் கழகத்தின் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சியில் இணைவது அவரவர் ஜனநாயக உரிமை எனவும் தெரிவித்தார்.
எம்ஜிஆர் கட்சியை துவங்கும் போது பல்வேறு சோதனைகளை சந்தித்ததாகவும், அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவும் பல்வேறு சோதனைகளை சந்தித்ததாகவும் கூறிய எடப்பாடி பழனிசாமி, எதிர்வரும் தலைவர்களும் எவ்வளவு சோதனைகளை சந்தித்தாலும் இறுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள், என தெரிவித்தார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.