சேலம் : தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நில அபகரிப்பு அதிகரித்து வருவதாகவும், ஏமாந்தவர்கள் கிடைத்தால் அவர்களிடம் நிலத்தை பறித்து விடுவதாகவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கடந்த அதிமுக ஆட்சியின் போது நீர்நிலைகளில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, எச்சரிக்கை பலகைகளை வைத்தோம். கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களோடு சேர்ந்து ‛நில அபகரிப்பு’-ம் வந்து விடுகிறது. எங்காவது ஏமாந்தவர்கள் இருந்தால், அவர்களின் நிலத்தை ஆட்டையை போட்டுவிடுவார்கள். அதிமுக – பா.ஜ.க உறவில் எந்த விரிசலும் இல்லை.
அனைத்து துறைகளிலும் ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே முதன்மையான அரசாக திமுக அரசு உள்ளது. பொய்யான வாக்குறுதிகளால் கொள்ளை புறம் வழியாக ஆட்சியை பிடித்துள்ளது திமுக. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாலும் ‛செவிடன் காதில் ஊதிய சங்கு’ போலதான் இந்த அரசு செயல்படுகிறது, எனக் கூறினார்.
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
This website uses cookies.