திருவள்ளூர் : முதலமைச்சர் ஸ்டாலினை போல எடுத்ததும் தலைவன் ஆனவன் நான் இல்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருவள்ளூரில் உள்ள ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை விட உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியானது.
ஒரு மணிநேரம் கூட வீணடிக்காமல் அதிமுகவினர் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். அதிமுகவுக்கு வாக்களிப்பவர்கள் எங்கிருந்தாலும அழைத்து வந்து வாக்களிக்கச் செய்ய வேண்டிய பொறுப்பு வேட்பாளர்களுடையது.
அரசியலுக்கு வந்து விட்டால் கோபப்படக்கூடாது. ஸ்டாலினைப் போல எடுத்த எடுப்பில் தலைவரானவன் நான் இல்லை. கிளைச் செயலாளரில் தொடங்கி இன்று இந்த உயரத்திற்கு வந்ததால் கீழ்நிலை நிர்வாகிகளின் கஷ்ட நஷ்டங்கள் என்னவென்று எனக்கு தெரியும். தமிழகத்தில் துரதிர்ஷ்டவசமாக திமுக ஆட்சி அமைந்துவிட்டது. அதனை அகற்ற மக்களும் தயாராகியுள்ளனர்.
திமுக அரசு மீது அரசு ஊழியர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து, இன்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசு ஊழியர்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும், எனக் கூறினார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.