மயிலாடுதுறை : தமிழகத்தில் அடுத்தாண்டு திமுக ஆட்சி இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து ஆசிபெற்றார்.
அப்போது, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது :- மதம் மற்றும் கோவில் சம்பந்தமான விஷயங்கள் குறித்து முழு விபரம் தெரிந்த பிறகுதான் கூற முடியும். அனைத்து மதங்களையும் சமமாக நடத்த வேண்டும். பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கால வழிமுறைகள் மற்றும் கோவில் வழிமுறைகளில் அரசு தலையிடக் கூடாது.
ஆதீன விவகாரங்களில் மூக்கை நுழைக்க இந்த அரசு முயற்சிக்கிறது. 500 ஆண்டுகாலமாக பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. ஆனால், அதற்கு திமுக அரசு தடை விதித்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக அரசு இறங்கிவந்து அனுமதி கொடுத்தது.
மாற்று ஏற்பாடுகள் செய்வதாக கூறும் திமுக அரசின் ஆட்சி அடுத்த ஆண்டு இருக்கிறதா..? என்பதை பார்க்கலாம். ஆண்டவன் என ஒருவன் இருக்கிறான். தவறு செய்பவர்களுக்கு கண்டிப்பாக அதற்கான பதிலடி கிடைக்கும். திமுக அரசு எதைபற்றியும் கவலைப்படவில்லை. குடும்பம் செழிக்க வேண்டும். எந்தெந்த துறையில் வருமானம் வரும் என்று பார்க்கின்றனர்.
மக்களை பற்றியும், விவசாயிகள் பற்றியும் சிந்திக்கவில்லை. சசிகலா அதிமுக.,வில் உறுப்பினர் இல்லை. அவருக்கும், அதிமுக.,விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எனக் கூறினார்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.