‘எங்கும்‌ கமிஷன்‌; எதிலும்‌ கமிஷன்‌’… சுயநல ஆட்சியால் ரூ.2 லட்சம் கோடி முதலீடு இழப்பு ; திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

சென்னை : தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார்‌ 2 லட்சம்‌ கோடி ரூபாய்‌ மதிப்பிலான தொழில்‌ முதலீட்டையும்‌, 2 லட்சம்‌ பேருக்கு மேல்‌ கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்பையும்‌, உதாசீனப்படுத்திய விடியா திமுக அரசுக்கு அதிமுக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ‌ கடும்‌ கண்டனம்‌ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார்‌ 2 லட்சத்து 6 ஆயிரம்‌ கோடி ரூபாய்‌ மதிப்பிலான தொழில்‌ முதலீட்டை இந்த விடியா அரசு தனது ஆணவத்தாலும்‌, அலட்சியத்தாலும்‌, “எங்கும்‌ கமிஷன்‌; எதிலும்‌ கமிஷன்‌’” என்ற ஆக்டோபஸ்‌ குணத்தாலும்‌ விரட்டி அடித்துள்ளது.

தமிழக மக்களின்‌ நலனை பேணுவதற்கு பதிலாக, தன்‌ குடும்ப நலனைக்‌ காப்பதில்‌ குறியாக இருக்கும்‌ இந்த விடியா அரசினுடைய முதலமைச்சரின்‌ நிர்வாகத்‌ திறமை இன்மையால்‌ தமிழக மக்களின்‌ நலன்கள்‌ அடகு வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகின்றன.

தமிழகத்தின்‌ தொழில்‌ வளத்தைப்‌ பெருக்குவதற்கு பதில்‌ தங்கள்‌ குடும்ப வளத்தைப்‌ பெருக்குவதிலேயே ஆட்சியாளர்கள்‌ கண்ணும்‌ கருத்துமாக செயல்படுவது, மக்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.

வேதாந்தா மற்றும்‌ பாக்ஸ்கான்‌ ([-000) நிறுவனங்கள்‌ இரண்டும்‌ இணைந்து, தமிழகத்தில்‌ 2 லட்சத்து 6 ஆயிரம்‌ கோடி ரூபாய்‌ முதலீடு செய்ய இருந்தது. இந்த விடியா திமுக அரசின்‌ ஆட்சியாளர்கள்‌ தங்களின்‌ பேராசையால்‌ இம்முதலீட்டை விரட்டியடித்துள்ளதாக செய்திகள்‌ வந்துள்ளன.

வேதாந்தா நிறுவனம்‌ 1976 முதல்‌ இந்தியாவில்‌ பல்வேறு தொழில்களைச்‌ செய்து வருகிறது. குறிப்பாக, மும்பையை தலைமையிடமாகக்‌ கொண்டு இந்தியாவில்‌ சாங்கம்‌, உலோக தயாரிப்புத்‌ தொழில்களில்‌ ஈடுபட்டு, பல்லாயிரம்‌ பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.

இந்நிலையில்‌, வாகனங்களுக்குத்‌ தேவையான “செமிகண்டக்டர்‌” எனும்‌ இயந்திர சாதன உற்பத்தி ஆலையை துவக்க வேதாந்தா நிறுவனமும்‌, பாக்ஸ்கான்‌ நிறுவனமும்‌ முடிவு செய்து, இதற்காக தமிழகம்‌ மட்டுமல்லாமல்‌ மேலும்‌ சில மாநில அரசுகளுடன்‌ பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால்‌, இந்த ஆட்சியாளர்கள்‌ விதித்த “கரப்ஷன்‌, கலெக்‌ஷன்‌, கமிஷன்‌”” நிபந்தனைகளால்‌ இந்த தொழிற்சாலை மும்பைக்குச்‌ சென்றுவிட்டதாகவும்‌ செய்திகள்‌ வந்துள்ளன. வேதாந்தா – பாக்ஸ்கான்‌ கூட்டு நிறுவனம்‌ மகாராஷ்டிர மாநில அரசுடன் ஒப்பந்தம்‌ செய்து பணிகளைத்‌ துவக்கியுள்ளது. இதன்‌ காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில்‌ 2 லட்சம்‌ பேருக்கு நேரடியாகவும்‌, மறைமுகமாகவும்‌ வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. மேலும்‌, மொத்த 0$1 வருவாயாக சுமார்‌ 1 லட்சத்து 20 ஆயிம்‌ கோடி ரூபாய்‌ கிடைக்கும்‌ என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்குக்‌ கிடைக்க வேண்டிய இந்த முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும்‌ வருவாய்‌ இந்த ஆட்சியாளர்களின்‌ அகோரப்‌ பசியால்‌ கைநழுவி போனதன்‌ விளைவாக, தமிழக இளைஞர்களின்‌ எதிர்காலத்தைக்‌ கேள்விக்குறியாக்கி உள்ளது இந்த விடியா அரசு.

தமிழகத்தில்‌ முதலீடு செய்ய வரும்‌ நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு உட்பட இதா கட்டமைப்பு வசதிகளை செய்து தரவேண்டியது மாநில அரசின்‌ கடமை. ஆனால்‌, இந்த முதலீட்டில்‌ ஆட்சியாளர்கள்‌ தங்கள்‌ குடும்ப ஆதாயத்தை எதிர்பார்த்ததால்‌, தொழில்‌ முதலீடுகள்‌ இடம்‌ மாறிவிட்டதாக விபரம்‌ அறிந்த தொழிற்துறையினா்‌ தெரிவிக்கின்றனர்‌.

75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின்‌ தொழில்‌ வளர்ச்சிக்கு, தனியாரின்‌ பங்களிப்பே இன்றியமையாததாக இருந்து வருகிறது.

தமிழகத்தில்‌ 30 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சியில்‌, சிறு, குறு, நடுத்தர தொழில்கள்‌ பல வளர்ந்தன. குறிப்பாக, அம்மாவின்‌ அரசில்‌ எலக்ட்ரிக்‌ வாகன தொழிற்சாலைகள்‌ கொண்டுவரப்பட்டன.

இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌ அவர்களுடைய ஆட்சியில்‌, தமிழக அரசின்‌ சார்பில்‌ கரூர்‌ மாவட்டம்‌, புகளூரில்‌ மிகப்‌ பெரிய காகித ஆலை; கிருஷ்ணகிரி மாவட்டம்‌, ஒசூரில்‌ கூட்டு நிறுவனமாக டைட்டான்‌ கைக்கடிகார தொழிற்சாலை ஆகியவையும்‌, தொடர்ந்து புகளூர்‌ காகித ஆலையின்‌ விரிவாக்கமாக திருச்சி, மொண்டிப்பட்டியில்‌ காகித அட்டை தொழிற்சாலையை புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களும்‌ உருவாக்கினார்கள்‌.

தொடர்ந்து மாண்புமிகு அம்மா அரசில்‌, தொழில்‌ முதலீட்டாளர்களுக்கு சிவப்புக்‌ கம்பளம்‌ விரிக்கப்பட்டு முதலீடுகள்‌ ஈர்க்கப்பட்டன. எங்களது சாதனைகளையும்‌, முயற்சிகளையும்‌, தாங்கள்‌ செய்ததாக ஸ்டிக்கர்‌ ஒட்டிக்கொள்ளும்‌ பணியினை இந்த விடியா திமுக அரசு தற்போது செய்து வருகிறது.

திமுக-வின்‌ 18 ஆண்டுகால ஆட்சியில்‌, அரசின்‌ சார்பாக எந்தெந்த தொழிற்சாலைகள்‌ தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா ?

தவறிப்போய்‌ ஒன்றிரண்டு தனியார்‌ நிறுவனங்கள்‌ தொழில்‌ தொடங்க வந்தாலும்‌, பேராசை பிடித்த திமுக ஆட்சியாளர்களின்‌ பிடியில்‌ சிக்கித்‌ தவிக்கின்றார்கள்‌ அல்லது ஓடிவிடுகின்றார்கள்‌. மக்கள்‌ நலனில்‌ அக்கறை காட்டாத இந்த விடியா அரசு தன்‌ போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்‌. தங்கள்‌ சுயநலனுக்காக மக்கள்‌ நலனை அடகு வைக்கும்‌ இந்த ஆட்சியாளர்களை, இனியும்‌ மக்கள்‌ கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டார்கள்‌. அவர்கள்‌ கொதித்தெழும்‌ காலம்‌ விரைவில்‌ வரும்‌ என்று
எச்சரிக்கிறேன்‌.

“சிலரை சில காலம்‌ ஏமாற்றலாம்‌, பலரை பல காலம்‌ ஏமாற்றலாம்‌. எல்லோரையும்‌
எல்லா காலமும்‌ ஏமாற்ற முடியாது” என்பதை இந்த விடியா திமுக அரசுக்கு நினைவூட்ட
கடமைப்பட்டிருக்கிறேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

ரஜினியோட அந்த வீடீயோவை ரிலீஸ் பண்ணுங்க..எல்லோரும் பார்க்கட்டும்..ரம்யா கிருஷ்ணன் பர பர பேச்சு.!

ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…

4 hours ago

IPL போட்டியில் சில உடைகளுக்கு தடை விதித்த பிசிசிஐ..குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடு.!

பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…

5 hours ago

என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!

பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…

6 hours ago

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது.. “போலி போட்டோஷூட் அப்பா”வுக்கு பட்டியல் போட்ட இபிஎஸ்!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…

6 hours ago

இனி தமிழ் மொழியை சொல்லி திமுக வியாபாரம் செய்ய முடியாது : ஹெச் ராஜா தாக்கு!

திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…

6 hours ago

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!

பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…

7 hours ago

This website uses cookies.