முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்திருச்சு… அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓடோடிப் போய் பார்க்க இதுதான் காரணம் ; இபிஎஸ் கடும் விமர்சனம்!!

சென்னை ; அமைச்சர் செந்தில் பாலாஜி வாய்திறந்தால் பிரச்சனை ஏற்பட்டு விடும் என முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர், அவரை இன்று அதிகாலை கைது செய்தனர். அப்போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது ;- வாக்கிங் சென்ற போது சோதனை குறித்து தகவல் அறிந்த உடன், முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் எனக் கூறினார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதன்படி, ஆவணங்களை கொடுக்க வேண்டியது தானே. கைது நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது.

பிரச்சனையில் இருந்து தப்பிக்க நாடகத்தை நடத்தியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜி கைதுக்கு காரணம் புதிய வழக்கு அல்ல; 4 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு அமைச்சரின் கைதில் என்ன மனித உரிமை மீறல் உள்ளது..? முறைகேடாக மதுபான பார்கள் செயல்பட அனுமதி அளித்ததன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் குடும்பத்தினருக்கு சட்டவிரோதமாக பணம் சென்றதாக புகார் உள்ளது. செந்தில் பாலாஜி உத்தமர் போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு; ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு. ரூ.30 ஆயிரம் கோடி குறித்து அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜி வாய் திறந்து விட்டால், தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படுமோ என்ற அச்சத்தில்தான் அவரை ஓடோடிச் சென்று பார்த்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

செந்தில் பாலாஜி கைதால் முதலமைச்சர், அமைச்சர்கள் பதறிப் போய் உள்ளனர். தார்மீக அடிப்படையில் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.

முறைகேடு புகார்கள் பற்றி ஆளுநரிடம் ஏற்கனவே அதிமுக மனுவாக அளித்துள்ளது. தலைமை செயலகத்தில் அமைச்சரின் அறையில் சோதனை நடத்தியது தமிழகத்திற்கே தலைகுனிவு, எனக் கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

7 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

9 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

10 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

11 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

11 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

12 hours ago

This website uses cookies.