ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் அதிமுக தான் ‘நம்பர் ஒன்’ ; நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து இபிஎஸ் பேச்சு..!!

Author: Babu Lakshmanan
1 July 2023, 10:22 am

அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்வதில் முதன்மையாக விளங்கி வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் மேம்பாட்டு நிதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் மூலம் 3.21 கோடி மதிப்பில் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்து மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வைத்தார்.

இதில் சேலம் எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி ஜலகண்டாபுரம் கொங்கணாபுரம் ஆகிய மூன்று பேரூராட்சிகள், நங்கவள்ளி, காடையாம்பட்டி ஆகிய மூன்று ஒன்றியங்கள் என பல்வேறு பகுதிகளில் 3.21 மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகையில், “சேலம் எடப்பாடி தொகுதி மக்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் சேலம் எடப்பாடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்வதில் முதன்மையாக விளங்கி வருகிறது. எடப்பாடி தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ந்து சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளோம்,” தெரிவித்துள்ளார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!