அண்ணாமலை பேச்சால் மாறும் கூட்டணி… எடப்பாடி பழனிசாமி போட்ட வியூகம் : கைக்கோர்க்க தயாராகும் சீமான்?!!
பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களுக்கு எதிராக பேசி வந்ததால், அதிமுகவின் முன்னாள் தலைவர்களை இகழ்ந்து பேசி வந்ததால் இந்த கூட்டணி முறிந்துள்ளது.
இந்த கூட்டணி முறிவில் வேறு சில முக்கிய விஷயங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. முதல் விஷயம் – அதிமுக – பாஜக 2024 லோக்சபா தேர்தலை ஒன்றாக சந்திக்காது. அதிமுக பாஜக இடையே 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி இருக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக புதிய கூட்டணி அமைக்கும். அதாவது புதிதாக கூட்டணி அமைக்கப்படும். இதற்கு விரைவில் பெயரும் வைக்கப்படும். இந்த புதிய கூட்டணி எப்படி இருக்கும் என்பதுதான் இப்போது கேள்வியே.
இந்த நிலையில் அதிமுக வட்டாரங்களில் புதிய கூட்டணி அறிவிக்கப்படும் என கூறியது முதல் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அதிமுக பாஜக கூட்டணி முறிவு பற்றி சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதனால் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க எடப்பாடி முயற்சி செய்யலாம். சீமானும் எடப்பாடியை பெரிதாக கடிந்து பேசியது இல்லை. இப்போதும் கூட சீமான் அதிமுக – பாஜக கூட்டணி உடைப்பை வரவேற்று உள்ளார்.
அதோடு திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும் கூறி உள்ளார். ஆனால் சீமான் – எடப்பாடி ஒரு புரிதலுக்கு வந்து அதிமுகவுடன் ஒரு சில தொகுதிகளில் மட்டும் கூட்டணி வைக்கும் வாய்ப்புகள் கூட உள்ளனர். நாம் தமிழர் வாக்கு வங்கி 5% வரை இருக்கும் பட்சத்தில் அது அதிமுகவிற்கு பாஜக கொடுத்த அதே பலத்தை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் எடப்பாடியும் நாம் தமிழர் கட்சியை உள்ளே இழுக்கவே பெரும்பாலும் முயலுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.