சென்னையில் தானாக வடிந்த தண்ணீரை, தாங்களே அகற்றிவிட்டதாக திமுக நாடகமாடுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் தினமும் காலை தொடங்கி இரவு வரை மழை வெளுத்து வாங்கி வருகிறது.
அதேபோல, அதன் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் விடியவிடிய மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசும், மீட்பு பணிகளில் ஈடுபட்டாலும், பல இடங்களில் இன்னமும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.மழை வெள்ளத்தை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- வடகிழக்கு பருவமழை தொடங்கி இதுவரை, சென்னையில் பெரியளவில் கனமழை பெய்யவில்லை ; மிதமான அளவில்தான் மழை பெய்துள்ளது. சென்னை பெருநகரில் 7 செ.மீ. வரையில் மழை பெய்தால் அது தானாக வடிந்துவிடும். ஆனால், தற்போது மழைநீரை அகற்றி விட்டோம் என்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் படகில் வந்தார்கள் என்றார்கள். ஆனால், இன்று படகுகளில் மீட்கப்படும் காட்சியை நீங்களே பார்க்கிறீர்கள். சென்னையில் ஆங்காங்கே குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது ; மழைநீர் வடிந்துவிட்டதாக ஆளும் தரப்பில் செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.
மழை, வெள்ளம் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் நேரில் வழங்கப்படவில்லை ; பெரும்பாலான இடங்களில் மருத்துவ முகாம்கள் கூட ஏற்படுத்தப்படவில்லை, எனக் கூறினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.