சென்னை பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் நோக்கி வந்த மின்சார ரயில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பயங்கர சத்தத்துடன் நடைமேடை மீது ஏறியது. இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து ரயிலில் இருந்து குதித்து நாலாப்புறமும் தெறித்து ஓடினர்.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த உயிர் சேதம் எதுவும் இல்லை. அதே சமயம் ரயில் ஓட்டுநர் காயம் அடைந்துள்ளதாகவும், சிகிச்சைக்காக அவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று விடுமுறை நாள் என்பதால் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது. இருந்தபோதிலும் ரயில் பெட்டியானது பலத்த சேதம் அடைந்து உள்ளதால் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயிலின் பிரேக் பிடிக்காததால் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதன் பின்னர், சேதம் அடைந்துள்ள பெட்டியை அகற்றிவிட்டு அங்கு இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.