விருதுநகரில் நடைபயணத்தின் போது தேநீர் அருந்திய அண்ணாமலை, அதற்கான பணத்தை பே.டி.எம் மூலம் செலுத்தி டிஜிட்டல் இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
விருதுநகரில் நேற்று ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் மேற்கொள்ளும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணத்தின் போது, பாண்டியன் நகர் பகுதியில் உள்ள சுவாமி ஜி டீக்கடையில் தேநீர் அருந்த உள்ளே சென்றார்.
தேநீர் அருந்திய அவர், தேநீருக்காண பணத்தை கையில் கொடுக்காமல் பே.டி.எம் மூலம் செலுத்தி டிஜிட்டல் இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
பின்னர், தேநீர் கடை உரிமையாளரிடம் கலந்துரையாடிய அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியின் பெரிய அளவு புகைப்படத்தை வைத்து அதற்கு கீழ் “தேநீர் கடையிலிருந்து ஆரம்பித்து இன்று தேசத்தின் பிரதமராக நரேந்திர மோடி” எனும் வாசகத்தை எழுதி வைக்க வேண்டும் என டீக்கடை உரிமையாளர்களிடம் அவர் கோரிக்கை வைத்தார். இந்த மாற்றம் உங்களது கடையிலிருந்து முதன் முதலாக தொடங்கட்டும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
இதனிடையே, தேநீர் அருந்தியதற்கான தொகையை விட கூடுதலாக பத்திரிக்கையாளர்கள் தேநீர் அருந்துவதற்கும் பணத்தை செலுத்துவதாக அண்ணாமலை கூறியது, அங்கு கலகலப்பை உண்டாக்கியது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.