விருதுநகரில் நடைபயணத்தின் போது தேநீர் அருந்திய அண்ணாமலை, அதற்கான பணத்தை பே.டி.எம் மூலம் செலுத்தி டிஜிட்டல் இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
விருதுநகரில் நேற்று ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் மேற்கொள்ளும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணத்தின் போது, பாண்டியன் நகர் பகுதியில் உள்ள சுவாமி ஜி டீக்கடையில் தேநீர் அருந்த உள்ளே சென்றார்.
தேநீர் அருந்திய அவர், தேநீருக்காண பணத்தை கையில் கொடுக்காமல் பே.டி.எம் மூலம் செலுத்தி டிஜிட்டல் இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
பின்னர், தேநீர் கடை உரிமையாளரிடம் கலந்துரையாடிய அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியின் பெரிய அளவு புகைப்படத்தை வைத்து அதற்கு கீழ் “தேநீர் கடையிலிருந்து ஆரம்பித்து இன்று தேசத்தின் பிரதமராக நரேந்திர மோடி” எனும் வாசகத்தை எழுதி வைக்க வேண்டும் என டீக்கடை உரிமையாளர்களிடம் அவர் கோரிக்கை வைத்தார். இந்த மாற்றம் உங்களது கடையிலிருந்து முதன் முதலாக தொடங்கட்டும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
இதனிடையே, தேநீர் அருந்தியதற்கான தொகையை விட கூடுதலாக பத்திரிக்கையாளர்கள் தேநீர் அருந்துவதற்கும் பணத்தை செலுத்துவதாக அண்ணாமலை கூறியது, அங்கு கலகலப்பை உண்டாக்கியது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.