நிதியமைச்சர் மகனுக்கு அமலாக்கத்துறை வைத்த செக் : ஆடிப்போன ஆளுங்கட்சி… அரசியலில் பரபரப்பு!!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தின் நிதியமைச்சராக இருப்பவர் ராமேஷ்வர் ஓரான்.
இவரது மகன் ரோஹித் ஓரானுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். ரோஹித் ஓரானுக்கு சொந்தமான இடங்களில் மதுபான கடைகள் உரிமம் தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஞ்சி, தும்கா, தியோகார் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ரோஹித் ஓரானுக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 14 அன்று, நில மோசடி வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறையால் சம்மன் அனுப்பப்பட்டது.
இருப்பினும், மாநிலத்தில் சுதந்திர தின விழாவுக்குத் தயாராக வேண்டியதை காரணம் காட்டி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள சோரன், மத்திய அரசுடன் ஒத்துப் போகாததால் மத்திய அமைப்புகள் தம்மை குறிவைப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.