அமலாக்கத்துறை வைத்த செக்… அமைச்சர் பொன்முடி மகனுக்கு புதிய சிக்கல் : உயர்நீதிமன்றம் அதிரடி!!!

அமலாக்கத்துறை வைத்த செக்… அமைச்சர் பொன்முடி மகனுக்கு புதிய சிக்கல் : உயர்நீதிமன்றம் அதிரடி!!!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமான கவுதம சிகாமணி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், நேரில் ஆஜராக கள்ளக்குறிச்சி எம்பி கவுதம சிகாமணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது , செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு சுமார் ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இதனடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. கவுதம சிகாமணி உட்பட 6 பேருக்கு எதிராக 90 பக்க குற்றப்பத்திரிகையை சமீபத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. இந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நவ. 24-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி. அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது. இதன்மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீது 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தினர். இதன்பின், அவரிகளிடம் விசாரணையும் நடைபெற்று இருந்த நிலையில், தற்போது ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

14 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

14 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

15 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

15 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

16 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

16 hours ago

This website uses cookies.