டெல்லி : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக அளித்த புகாரின் பேரில், தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக என 79 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அனைத்து வேட்பாளர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தேர்தல் விதிகளை திமுக மீறுவதாக அதிமுக சார்பில் அடுத்தடுத்து பல்வேறு புகார்களை அளித்து வருகிறது.
அந்த வகையில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகார் மனுவில், ஈரோடு இடைத்தேர்தலில் வரும் 27 ல் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலையொட்டி வேறு பகுதியில் வசிக்கும் நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்ததாகவும், பல பெண்கள் பெயர்கள் 2 முறை இருப்பதாகவும் அதிமுக புகார் அளித்திருந்தது. மேலும் வாக்காளர் விவரம் விற்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா ஷாகுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…
‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…
இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…
பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார். ஸ்டோன் பீச் பிலிம்ஸ்,…
தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.