ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உள்பட 4 பேர் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் இறங்கி ரெயில் மறியல் செய்ய சென்றார்கள்.
இந்த போராட்டத்தை பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கடுமையாக கலாய்த்து உள்ளார். அவர் கூறியதாவது:- நாங்கள் தேசிய கட்சி என்று தேய்ந்து போன காங்கிரசை தூக்கி சுமக்க பார்க்கிறார்கள். நாங்களும் ரெயில் மறியல் போராட்டத்துக்கு செல்வோம் என்று போராட சென்றார்கள்.
எத்தனைபேர் தெரியுமா? மாநில தலைவரையும் சேர்த்து 4 பேர். ஐயா… காங்கிரசின் சின்னம் கை. அந்த கையில் 5 விரல்கள் உண்டு. ஆனால் போராட்டத்துக்கு வந்தவர்கள் 4 பேர்தான்.
ஒரு விரல் கூட இல்லாமல் போய்விட்டது. எருமை மாட்டை கூட நாலு பேரால் தடுத்து விட முடியாது. இவர்கள் ரெயிலை மறிக்க போகிறார்களாம். இதுதாங்க காங்கிரஸ் நிலைமை.
மோடி என்பது ஒரு சமூகம். அந்த சமூகத்தையே திருடர்கள் என்று விமர்சித்ததால் ராகுல் தண்டனைக்குள்ளாகி இருக்கிறார். இவரைப்போல் ஏற்கனவே சிலர் தண்டனை பெற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள்.
அப்போதெல்லாம் கண்டு கொள்ளாத காங்கிரஸ் இப்போது ராகுலுக்கு தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று குதிக்கிறது. சட்டத்தை மீறி விமர்சித்தால் இப்படித்தான் நடக்கும் என்பது தெரிய வேண்டாமா?…என கூறியுள்ளார்.
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
This website uses cookies.