கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் அமைச்சர் மனோதங்கராஜின் மகனுக்கு என்ன வேலை என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பாஜக அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ எம் ஆர் காந்தி ஆகிய கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறும்போது ” கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு கலவரத்திற்கு பின்னர் வேணுகோபால் கமிஷன் பரிந்துரை இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதன்படி புதிதாக வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்ற விதி உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஆகியோர் புதிய வழிபாட்டு தலங்களுக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருவது பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
மேலும், அதிகாரிகளின் ஆலோசனை கூட்டங்களில் தகவல் தொழில்நுட்ப வியல் துறை அமைச்சர் மனோதங்கராஜின் மகனுக்கு என்ன வேலை என்பதை விளக்க வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர் எப்படி அனுமதி அளித்தார் என்பது தெரியவில்லை, என்று கூறினார்.
இதனை அடுத்து, நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ எம் .ஆர் காந்தி பேசும்போது :- கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக வழிபாட்டுத் தலங்கள் அமைவதால் ஏற்படும் பிரச்சனை குறித்து தமிழக முதல்வரிடம் பேச நேரம் ஒதுக்க கேட்டு, 25 நாட்கள் ஆகியும் இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை. எனவே, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டிசம்பர் 11ஆம் தேதி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம், எனக் கூறினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.