திமுக வில் அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் டெல்லியில் இருந்து சத்துமாவு தேங்காய் பவுடர் போன்றவற்றுடன் போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2500 கோடி ரூபாய் அளவுக்கு போதை பொருளை கடத்தியுள்ளது தெரியவந்தது. தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார்.போதைப் பொருள் சர்ச்சைக்கு பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக, கடந்த மார்ச் 9ஆம் தேதி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்த கைது திரைத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஜாபர் சாதிக் மீது, அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில், ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றம் 5 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன் வழங்கியுள்ளது. பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வழக்கு விசாரணை முடியும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட் கிழமையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் சாதிக் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
செல்போனை எப்போதும் ஆன் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகவரி மாறினால் அது குறித்த விவரத்தையும் விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.மேலும் ஜாமீன் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போதைப் பொருள் வழக்கில் ஜாமின் பெற்றிருந்தாலும் ஜாபர் சாதிக் வெளியே வர முடியாத நிலையில் செக் வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாபர் சாதிக் திஹார் சிறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் ஜாமீன் கிடைத்தும் வெளியே வரமுடியாத நிலலை ஏற்பட்டுள்ளது.
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
This website uses cookies.