திமுக வில் அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் டெல்லியில் இருந்து சத்துமாவு தேங்காய் பவுடர் போன்றவற்றுடன் போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2500 கோடி ரூபாய் அளவுக்கு போதை பொருளை கடத்தியுள்ளது தெரியவந்தது. தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார்.போதைப் பொருள் சர்ச்சைக்கு பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக, கடந்த மார்ச் 9ஆம் தேதி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்த கைது திரைத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஜாபர் சாதிக் மீது, அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில், ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றம் 5 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன் வழங்கியுள்ளது. பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வழக்கு விசாரணை முடியும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட் கிழமையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் சாதிக் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
செல்போனை எப்போதும் ஆன் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகவரி மாறினால் அது குறித்த விவரத்தையும் விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.மேலும் ஜாமீன் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போதைப் பொருள் வழக்கில் ஜாமின் பெற்றிருந்தாலும் ஜாபர் சாதிக் வெளியே வர முடியாத நிலையில் செக் வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாபர் சாதிக் திஹார் சிறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் ஜாமீன் கிடைத்தும் வெளியே வரமுடியாத நிலலை ஏற்பட்டுள்ளது.
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
This website uses cookies.