திருவாரூர் ; ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டு செயல்படுவது தவறு என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
தமிழக ஓய்வு பெற்ற டிஜிபி பொன்மாணிக்கவேல் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் சிவனடியார்களுடன் சேர்ந்து உழவாரப்பணி மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது :- திருவாரூர் தியாகராஜர் கோயில் சிலைகள் காப்பகங்களில் 5090 சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 813 சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 193 சிலைகள் போலியானவை. அதாவது ஐம்பொன் சிலைகளை மாற்றி விட்டு, உலகச் சிலைகளை வைத்துள்ளனர். இந்த சிலைகளை மாற்றி வைத்தது, ஒரு மனிதன் தான் மாற்றி வைத்திருக்க வேண்டும். அப்படி செய்தால் அது குற்றமாகும்.
இந்த குற்றங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் நடைபெற்று இருக்க வேண்டும். இதில், எந்த ஒரு ஆட்சியாளர்களுக்கும் பொறுப்பு அல்ல. அதே நேரத்தில், அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு செயல்படுவது தவறு. எனவே, மாயமான சிலைகள் குறித்து வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை செய்தால் உண்மை வெளிப்படும்.
கோயில்களுக்கு சேர சோழர் பாண்டியர் மன்னர் காலத்தில் கோடிக்கணக்கான சொத்துக்கள் கொடுக்கப்பட்டு அதிலிருந்து தான் இன்றளவும் ஊழியங்கள் வழங்கப்படுகின்றன. எனவே, இதில் நடைபெறும் தவறுகளை கண்டறிய புலன் விசாரணை செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு சாதாரண மனிதன். என்னை முன்னிலைப்படுத்தி செய்திகள் வெளிவருவதால் சர்ச்சை எழுகிறது. இதில் அரசு புலன் விசாரணை செய்தால் உண்மைகள் வெளிப்படும், என தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.