ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவங்க நாங்க… விவாதம் நடத்த நான் தயார் ; அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு விஜயபாஸ்கர் சவால்..!!

அண்ணா திமுக கழகம் எந்த காலத்திலும் யாருக்கும் பயந்து கிடையாது என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மதுரையில் நடக்கும் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர் கூறியதாவது :- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மதுரை மாநாடு திருப்பு முனையாக அமையும். இந்த மாநாடு வெற்றி பெற உள்ளதை உளவுத்துறை மூலம் அறிந்த தமிழக அரசு பயத்தில் அதே தேதியில் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடத்தை தவிர்த்து, தேர்தல் வாக்குறுதி சொல்வது போன்று நடந்து கொள்ள வேண்டும்.

திமுக நடத்தும் உண்ணாவிரதத்தை தாண்டி மாநாடு மிகப்பெரிய வெற்றி பெறும். எல்லாத் தடைகளையும் தாண்டி அண்ணா திமுக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை விவாதத்துக்கு அழைக்கிறார். விவாதிக்க நான் 24 மணி நேரமும் தயாராக இருக்கிறேன். நல்ல நாளில் தான், நல்ல நிகழ்ச்சி நடைபெறும்.

ஆன்மீகத்தில் நாங்கள் நம்பிக்கை உடையவர்கள். அவர்கள் வேண்டுமானால் அஷ்டமி நவமியில் வைத்துக் கொள்ளட்டும். அதிமுக ஒரு கடல் அலை சின்னத்திரை கொண்டு கடல் அலையை தடுத்து நிறுத்த முடியாது. எல்லா தடைகளையும் தாண்டி மதுரைக்கு தொண்டர்கள் செல்வார்கள்.

புதுக்கோட்டை மன்னர் அவர்கள் தனது அரண்மனையை ஆட்சியர் அலுவலகத்திற்கு 100 ஏக்கர் பரப்பளவில் ஒப்படைத்தார். அவருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு இரண்டு ஏக்கர் அளிப்பதற்கு இந்த அரசுக்கு மனமில்லை. மன்னர் குடும்பத்தினர் விரும்புகின்ற இடத்தை இந்த அரசு வழங்க வேண்டும். அண்ணா திமுக கழகம் எந்த காலத்திலும் யாருக்கும் பயந்து கிடையாது.

சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட கொடுமையின் போது சாட்சியாக இருந்த திருநாவுக்கரசர், தற்போது பிறழ் சாட்சியாக பதவிக்காக மாறி உள்ளது கண்டனத்திற்குரியது. வரலாறு என்றைக்கும் மாறாது. காலங்கள் மாறலாம், காட்சிகள் மாறலாம், ஆனால் வரலாறு எப்போதும் மாறாது. நடந்தவைகள் இந்த வரலாறு ஒருபோதும் யாரும் மாற்ற முடியாது.

சட்டமன்றத்தில் அன்றைய தினம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு ஏற்பட்டது கருப்பு தினமாக அண்ணா திமுக தொண்டர்கள் நினைத்து வருகிறார்கள். சட்டமன்றத்தில் நடைபெற்ற அன்றைய தினம் நடந்த சம்பவத்திற்கு சாட்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநாவுக்கரசர் இருந்தார். இன்று திருநாவுக்கரசர் பிர்ழ் சாட்சியாக மாறியுள்ளார். இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன், என தெரிவித்துள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே கர்ப்பம்; அப்பா யார்னு கேட்பாங்களே? விஜய் டிவி பிரியங்காவின் பகீர் பின்னணி

டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…

54 minutes ago

பேக்கரி டீலிங்… நீட் தேர்வு குறித்து காரசாரம் : அமைச்சருக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!

நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…

59 minutes ago

விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!

அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து  கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…

2 hours ago

3 மகள்களுக்கு தாயான பிரியங்கா.. 2வது கணவர் வசி குறித்து பரபரப்பு தகவல்!

பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…

3 hours ago

ஜெனிலியாவையே மறந்துட்டீங்களேப்பா- சச்சின் பட துணை நடிகைக்கு திடீரென குவிந்த ரசிகர்கள்

சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…

3 hours ago

Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?

90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…

3 hours ago

This website uses cookies.