சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆம்லேட், டீ போடும் திமுக அமைச்சர்கள் பாத்திரத்தை மட்டும்தான் கழுவவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சிந்தனை சிற்பி சிங்காரவேலனின் 164வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுக அரசில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தீக்குளிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருப்பதாகவும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்யும் கனிமொழிக்கு பழைய வரலாறு தெரியாது எனவும், அதிமுக ஆட்சியை கலைத்த இந்திரா காந்தியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்தவர் கருணாநிதி எனவும் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆம்லேட், டீ போடும் திமுக அமைச்சர்கள் பாத்திரத்தை மட்டும்தான் கழுவவில்லை, என்றார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் இலங்கை பயந்து இருந்ததாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு துப்பாக்கி சூடு சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு காங்கிரஸ் மீது திமுக பழியை போடும் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் அத்துமீறல்கள், அநியாயங்கள் பண்ணாலும் அதையும் தாண்டி அதிமுக வெற்றி பெறுவது உறுதி, என்றார்.
முன்னதாக சிந்தனை சிற்பி சிங்காரவேலன் சிலைக்கு சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீரசாமி மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தவல்லி ஆகியோர் அரசு சார்பில் மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் சிந்தனை சிற்பி சிங்கார வேலருக்கு மரியாதை செலுத்தினர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.