சென்னை : திருச்சியில் நடத்தப்போகும் கூட்டத்தின் மூலம் கருப்பு பணத்தை ஓ.பன்னீர்செல்வம் வெளியே எடுப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஆளுநரை பொறுத்தவரை அரசியல் அமைப்பு சட்டத்தில் என்ன சொல்கிறதோ அதை பொறுத்து தான் இயங்க வேண்டும். திமுக அரசை பொறுத்தவரை இவர்கள் என்ன சொன்னாலும் ஆளுநர் சரி என்று சொன்னால் வாழ்க என்று சொல்வார்கள். எதிர்கட்சியாக திமுக இருக்கும் போது சட்டமன்றத்தில் சட்டை , பனியனை கிழித்து கொண்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தானே போனாங்க.
ஓ.பி.எஸ். திருச்சியில் 24ம் தேதி கூட்டம் வைத்துள்ளார்கள். இதற்கு யாரை வேண்டும் என்றாலும் அழைத்து கொள்ளட்டும். எங்களுக்கு விட்டது சனியன்.
ஓ.பி.எஸ் கிட்ட இருக்கும் கருப்பு பணம் கூட்டம் மூலமாக வெளியே வரும்.
ஓ.பி.எஸ் கருப்பு பணம் 200, 300 ஆக மக்களுக்கு போகும்.
கலாஷேத்திரா கல்லூரி விவகாரத்தில் விசாரணை போகுது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் இல்லாத போது Go Back Modi. ஆட்சியில் இருக்கும் போது Come Back Modi என்று சொல்வார்கள், என தெரிவித்துள்ளார்.
பிரதமர் பாதுகாப்பில் ஏதோ குளறுபடி இருந்துச்சாம். இது உங்களுக்கு தெரியுமா என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், சட்டமன்றத்தில் பேச்சு உரிமை என்ற ஒன்றே இல்லை. எதிர்கட்சி துணை தலைவராக ஓ.பி.எஸ் நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது. இது குறித்து பல தடவை எடுத்து சொல்லியாச்சு. சட்டமன்ற உறுப்பினர்களை விட சபாநாயகர் தான் அதிகம் பேசுகிறார். உறுப்பினர்களை பேசவிடுவதில்லை, என தெரிவித்துள்ளார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.