அக்கறை இல்லாத முதலமைச்சர் ஸ்டாலின்… விவசாயிகளின் கண்ணீர் திமுக அரசை சும்மா விடாது ; எச்சரிக்கும் ஆர்பி உதயகுமார்!!

விவசாயிகள் மீது அக்கறை இல்லாத முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :- இன்றைக்கு விவசாயிகள் எல்லாம் பாதிப்படைந்து கண்ணீர் வடித்து வேதனையில் உள்ளார்கள். இதற்கு  திமுக அரசு தீர்வு காணவில்லை. எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது டெல்டா பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதை அறிவித்தார். அதன் மூலம் காவிரி காப்பாளர் என்கிற பட்டத்தினை விவசாயிகள் அவருக்கு பட்டம் சூட்டி மகிழ்ந்தார்கள்.

ஏனென்றால் அன்றைக்கு துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டார். அப்போது தோழமை கட்சிகள் எல்லாம் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மீண்டும் பொன்விளையும் பூமியாக எடப்பாடியார் உருவாக்கி கொடுத்தார்.

நான் டெல்டாகாரன் என்று சொல்லுகிற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், இன்றைக்கு குறுவை சாகுபடிக்கு இன்சூரன்ஸ் செய்யாதது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது,  தமிழக அரசு அதற்கு தகுதியான முயற்சிகள் எடுக்கவில்லை, ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் முதலமைச்சராக இருந்த பொழுது 100 சதவீதம் பயிர் காப்பீடு  தொகையை பெற்று தந்தார்கள். அது மட்டுமல்லாது, வெள்ளம் போன்ற காலங்களில் நிவாரணம், இடுபொருள் மானிய நிவாரணமாக பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்குவதோடு,  இன்சூரன்ஸ் காப்பீடு நிறுவனத்தில்

மூலம் ஒரு ஏக்கருக்கு 84 ஆயிரம் வரை பெற்று தந்தார். தற்போது திமுக அரசு ஒரு ஏக்கருக்கு13,500 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு போதாது. ஆண்டு முழுவதும் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆனால், குறுவை சாகுபடிக்கான காப்பீட்டை செய்ய இந்த அரசு இன்னமும் முன்வரவில்லை.

குருவை சாகுபடிக்கான காப்பீட்டை இந்த அரசு கைவிட்டதன் காரணமாக, இன்றைய கேள்வியாக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்தில் கூட அந்த விவாதம் எழுப்பப்பட்டிருக்கிறது. விவசாயிகள் மீது அக்கறை இல்லாத ஒரு முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். இந்த நிலை, தொடர்ந்தால் விவசாயிகள் கொதித்து எழுதுவார்கள். முல்லை பெரியாரில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீரைப் பெற்று தராதவர் எப்படி காவிரியில் இருந்து தண்ணீரை எப்படி தர முடியும்.

இன்றைக்கு அக்கறை இல்லாத அரசாக, மக்கள் விரோத நிலைப்பாட்டை தான் அரசு கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக நமக்கு தெரிகிறது. கடவுள் என்ற முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி, அந்த  விவசாயி கண்ணீர் வடித்தால் அந்த பாவம்  திமுக அரசை சும்மா விடாது.

இதற்கெல்லாம் தீர்வு காண்பதற்கு எடப்பாடியாரின் ஆட்சி காலத்திலே செய்த அந்த மகத்தான  நிவாரண நடவடிக்கை எல்லாம் முன்மாதிரியாக கொண்டு நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் என கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

35 minutes ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

1 hour ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

2 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

3 hours ago

நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…

4 hours ago

கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…

4 hours ago

This website uses cookies.