கருணாநிதி காலம் To உதயநிதி காலம் வரை விஞ்ஞான ரீதியாக ஊழல்… திமுக மீது மக்களிடத்தில் அவநம்பிக்கை ; ஆர்பி உதயகுமார் விமர்சனம்

கருணாநிதி காலம் தொட்டு ஸ்டாலின், உதயநிதி காலம் வரை விஞ்ஞான ரீதியாக ஊழல் நடைபெற்றுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது :- வருமான வரி சோதனைகளில் சார் பதிவாளர் அலுவலகங்களிலே 3,000 கோடி அளவில் கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் பத்திரப்பதிவு, சிசிடிவி கேமரா கண்காணிப்பு என்று பல விவரங்களை அரசு தங்களுடைய சாதனையாக பறைசாற்றி கொள்கிறது. ஆனால் 3,000 கோடி அளவில் கணக்கு காட்டாமல் சார் பதிவாளர் அலுவலகங்களில் கண்டுபிடிக்கப்பட்டபோது மக்களிடத்தில் அரசின் மீது மிகப்பெரிய அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  

திமுகவின் அந்த காலத்தை எடுத்துக் கொண்டால் கருணாநிதி காலம் தொட்டு ஸ்டாலின், உதயநிதி வரை விஞ்ஞான ஊழல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பூச்சி பேரல் ஊழல், 2ஜி ஊழல் நடைபெற்றது. இதை தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக திருந்தி இருப்பார்கள் என்று வாக்களித்த மக்களுக்கு இன்றைக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிதியமைச்சர் ஆடியோ பதிவில், 30,000 கோடியை எங்கே வைப்பது என்று தெரியாமல் ஸ்டாலின் மகனும், மருமகனும் தத்தளித்து கொண்டிருப்பது என்கிற ஒரு செய்தி தமிழ்நாட்டு மக்களிடத்திலே ஒரு அதிர்வலை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, வருமானவரித்துறையும், அமலாக்க துறையும் சோதனை செய்ததில் செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு கொடுக்காமல் உள்ளார் குற்றச்சாட்டு உள்ளது.

ஒரு பாட்டிலுக்கு ஒரு நாளைக்கு பத்து ரூபாய் வீதம், ஒரு கோடி மதுபான பாட்டில் விற்பனையில் ஒரு நாளைக்கு 10 கோடி என்ற அளவிலே, மாதத்திற்கு 300 கோடி ரூபாய், வருடத்திற்கு 3,600 கோடி ரூபாய் என்கிற அளவிலே அந்த ஊழல் விவகாரங்கள் இன்றைக்கு சிரியாய் சிரித்துக் கொண்டிருக்கிறது .

ஒரு வங்கியில் வருமானவரித்துறை ஆய்வு செய்கிறார்கள். அங்கு பல்லாயிரம் கோடி ரூபாய் கணக்கிலே வங்கியில் கணக்கில் காட்டப்படாத பணம் இருக்கிறது. அது யாருடைய பணம் என்று மிகப்பெரிய கேள்விக்கு விடை தெரியாமல் இருக்கிறார்கள்.  

30 ஆயிரம் கோடி கணக்கில் காட்டாத பணம், மதுபானத்தில் ஆண்டுக்கு 3,600 கோடி என விஞ்ஞான ஊழலாக உள்ளது. இதை சற்று பின்னோக்கி பார்த்தால் கருணாநிதியின் சர்க்காரிய ஊழலில், 20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை காணவில்லை என்று சொல்லுகிற போது, சர்க்கரையை எறும்பு தின்று விட்டது என்றும், அந்த காலி சாக்கை எலி கடித்து விட்டது என்று கூறிய போது நீதிமன்றமே, இது விஞ்ஞான ரீதியில் ஊழல் என்று தீர்ப்பு கூறியது.

நேற்று முன் தினம் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை அமைச்சர் மதுரையிலே பல்வேறு ஆய்வு பணிகள் செய்து, அதில் மதுரையில் உயர் நீதிமன்றம் கிளை அமைத்தது கருணாநிதி போட்ட பிச்சை என்று கூறுகிறார். கருணாநிதியின் அரசிலே அடித்த கொள்ளையை, அடித்த ஊழலை இந்த நாடே சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறது அதற்கு உரிய விளக்கத்தை தெரிவிப்பதற்கு அமைச்சர் முன்வரவில்லை.

அதேபோல் ஆர்.எஸ்.பாரதி பட்டியல்இன மக்களுக்கு உயர் நீதிமன்றத்தில் நீதி அரசராக நியமித்து கருணாநிதி போட்ட பிச்சை என்று கூறி அது மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டது.
ஒரு அமைச்சர் பெண்களுக்கு இலவச பேருந்தை ஓசி பஸ் என்றும், பெண்களுக்கு வழங்கப்போகும் ஆயிரம் ரூபாய் தொகையை மூத்த அமைச்சர் கொச்சைப்படுத்தியும், அமைச்சரிடம் மனு கொடுக்க வந்த பெண் மீது மனுவை தலையில் அடிப்பதும், ஒரு அமைச்சர் தொண்டர்கள் மீது கல் வீசி எறிவதும் உள்ளது. வளர்ச்சிக்கான திட்டங்களை எதுவும் செய்யவில்லை.

இன்றைக்கு விலைவாசி விண்ணை மூட்டுகிறது. மக்கள் பசி தீர்க்க அக்கறை இல்லாத அரசாக உள்ளது. இதை தான் மாமன்னம் படம் ஓடினால் என்ன, ஓடாவிட்டால் என்ன மக்களின் பசியாய் தீர்க்க போகிறது என்று எடப்பாடியார் உரிமை குரல் எழுப்பினார். இன்றைக்கு தக்காளி, காய்கறி, அரிசி, பருப்பு இதையெல்லாம் விலையேற்றம் அதிகமாக உள்ளது. இந்த களநிலவரத்தை முதலமைச்சர் காது கொடுத்து கேட்க மறுக்கிறார். 

ஊழல் சாம்ராஜ்யத்தில் இருந்து மக்களை காப்பாற்ற எடப்பாடியார் போர்க்குரல் எழுப்பி வருகிறார். இன்றைக்கு நிர்வாகம் எல்லாம் ஸ்தம்பித்து போய் உள்ளது. முதலமைச்சர் இது குறித்து வாய் திறக்க மறுக்கிறார்.

அமைச்சர்கள் எல்லாம் உளரல் பேச்சுக்கு வாய்பூட்டு போடும் முதலமைச்சரே, ஒரு விழாவில் நான் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது கெட்டதை தைரியமாக செய்தேன் என்று கூறுகிறார். இன்றைக்கு மக்கள் தான் முதலமைச்சருக்கு வாய் பூட்டு போட வேண்டும்.

இன்றைக்கு தங்கள் பேசுவது தான் சட்டமாக உள்ளது என்கிறார்கள். உண்மை மறைக்கப்படுகிறது, நியாயம் மறைக்கப்படுகிறது. தோல்வி மறைக்கப்படுகிறது. இயலாமை மறைக்கப்படுகிறது. நிர்வாக குளறுபடி மறைக்கப்படுகிறது.

எடப்பாடியாரின் கருத்தை மக்கள் வலுப்படுத்த வேண்டும் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் வீர விழா வெற்றி மாநாடு புதிய சரித்திரம் படைக்கும் எனக் கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

21 hours ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

23 hours ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

23 hours ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

24 hours ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

1 day ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

1 day ago

This website uses cookies.