2ஜி ஊழல் பணத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கமிஷன் கொடுத்த திமுக எம்பி ஆ.ராசா? : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சந்தேகம்..!!

திமுக எம்பி ஆ.ராஜாவுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாய்ப்பூட்டு சட்டம் போட வேண்டும் என்றும், அப்போது தான் தி.மு.க.விற்கு இருக்கும் கொஞ்ச, நஞ்ச மதிப்பும் இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும், மதுரை மேற்குத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ தனது தொகுதிக்கு உட்பட்ட பைகரா பகுதியில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது, பைகாரா மாநகராட்சி பள்ளியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது :- ராஜா என்ற பெயர் பிரச்னையான பெயர் இல்லை. என்னுடை பெயர் கூட ராஜா தான். ஆனால், எங்களுடைய பெயர்களுக்கு கலங்கம் விளைக்கும் வகையில் ஆ.ராஜா செயல்படுகிறார். இது போன்ற பிள்ளையை பெற்றதற்கு அவரின் தாய் தான் வருத்தப்பட வேண்டும். இவ்வளவு பிரச்னைகள் நடந்த போதும் தி.மு.க., தலைவர் பாராமுகமாக அமைதியாக உள்ளார்.

ஏற்கனவே சட்ட ஒழுங்கு மோசமாக உள்ள சுழலில், மேலும் இதனை பாதிப்படையும் வகையில் பேசி வருகின்றனர். ஆ.ராஜா எப்போதும் வருத்தம் தரும் வார்த்தைகளை உதிர்க்கிறார். ஏற்கனவே முன்னாள் முதல்வர் எடப்பாடியாரின் பிறப்பு குறித்து தவறாக பேசினார். தற்போது இப்படி பேசியுள்ளார். எனவே, ஆ.ராஜாவுக்கு தி.மு.க. தலைவர் வாய்ப்பூட்டு சட்டம் போட வேண்டும். அப்போது தான் தி.மு.க.,விற்கு இருக்கும் கொஞ்ச, நஞ்ச மதிப்பும் இருக்கும்.

விலை வாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டுவரி உயர்வு உள்ளிட்டவற்றை மறைப்பதற்காக ஆ.ராஜா பேச வைக்கப்படுகிறாரா என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏன் முதல்வர் ஆ.ராஜா விசயத்தில் வாய் மூடி மெளனியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. இதுவே அதிமுகவினர் இப்படி பேசி இருந்தால் கடுமையான நடவடிக்கைகளை கட்சி தலைமை எடுத்திருக்கும்.

2ஜி அலைக்கற்றை தொடர்பான ஊழலில் பெரும் பகுதியை அவர் கொடுத்திருப்பார் போல, அதனால் அவரை கண்டிக்க பயப்படுகின்றனர் என எண்ணுகிறேன். தி.மு.க., எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அடிதடியை கையில் எடுக்கும். மதுரையில் கூட ஒரு தாசில்தாரை தி.மு.க., தொண்டரணியை சேர்ந்த நபர் அடித்தார். இது போன்ற பல்வேறு வன்முறை சம்பவங்களை தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் நிகழ்த்துவார்கள்.

எங்க ஆட்சியில் நாங்கள் சொல்வதை போலீஸ் ஏட்டு கூட கேட்க மாட்டார்கள். ஆனால் தி.மு.க., ஆட்சியில் டி.எஸ்.பி.,யை டீ வாங்கிட்டு வரசொல்லி அராஜகம் செய்வார்கள். இது போன்ற சம்பவம் தி.மு.க., வந்தால் எப்போதும் மாறாது. தி.மு.க., ஆட்சிக்கு ஸ்டாலின் ஆட்சி வந்தாலும் உதயநிதி வந்தாலும் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறும், என தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ராமேஸ்வரம் தீர்த்தவாரியில் குளித்து சாமி தரிசனம் செய்துகொண்டது தொடர்பான கேள்விக்கு, “இதை ஆ.ராஜாவிடம் தான் கேட்க வேண்டும். அதே போல் ஆக்டிங் முதல்வராக செயல்பட்டு வரும் சபரீசன் ஊர், ஊராக கோயிலுக்கு செல்கிறார். துர்கா ஸ்டாலின் செல்கிறார். இதற்கெல்லாம் ஆ.ராஜா என்ன சொல்வார். இவர்கள் எல்லாம் என்ன விபச்சாரிகளின் பிள்ளைகளா என்ன? எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அறிஞர் அண்ணா சொன்னார். இதையெல்லாம் தாங்கும் இதயம் தான் ஸ்டாலினிடம் உள்ளது போல !, எனக் கூறினார்.

தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் நிர்வாகத்திறன் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- ஸ்டாலினுக்கு நிர்வாக திறன் இருக்கா என தெரியவில்லை. ஆனால், கட்டப் பஞ்சாயத்து, ஊழல் பெருகிப்போனது. அதே போல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை வஸ்துக்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. பள்ளிக்கூடங்களில் அருகே போதை பொருட்கள் விற்பனை அதரித்துள்ளதாக மதுரையில் நீதிபதியிடமே புகார் வந்துவிட்டது. அதனை நீதிபதி தலைமையில் முதல்வர் அமைத்த குழுவே குற்றம் சொல்கிறது. இது வெட்கக்கேடானது. இதையும் மூடி மறைக்கிறார் முதல்வர். இதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை, என்று (கண்ணீர் வடிப்பது போல்) கிண்டல் அடித்தார்.

“இந்த ஆட்சியில் நிர்வாக சீர்கேடு இருப்பதற்கு பள்ளிக் குழந்தைகளே சாட்சியாக இருக்கின்றனர். அவர்களுக்கு கொடுக்கும் சீருடை கூட சரியில்லை. அது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முன்பே நடந்துவிட்டது, எனக் கூறினார்.

தென்காசி பாஞ்சான்குளம் கிராமத்தில் நடைபெற்ற சாதிய பாகுபாடு குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- இது ஒரு அருவெருக்கப்படும் சம்பவம். தமிழகம் மற்ற மாநிலங்களை விட வித்தியாசமானது. அண்ணன், தம்பி போல பழகிவரும் நம்மிடம் இப்படியான சம்பவம் நடைபெறுகிறது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு கட்சியில் செயல்படுகிறது. அவையெல்லாம் அகதிகளாக போய்விட்டனரா ? கே.பாலகிருஷ்ணன், திருமாவளன், முத்தரசன் உள்ளிட்டோர் அமைதியாக இருப்பது ஏன்..? வெளியூர்களுக்கு சென்றுவிட்டனரா ? தேர்தல் சீட்டுக்காக தி.மு.க.,விடம் அமைதியாக இருக்கின்றனர்.

தற்போது பல்வேறு வகையான காய்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறை அமைச்சர் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என்றார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

12 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

12 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

13 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

15 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

15 hours ago

This website uses cookies.