முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு உள்ளிட்ட அமலாக்கத்துறை நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கரின் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தற்போது தேர்தல் பணிகளின் காரணமாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய விராலிமலை எம்எல்ஏவுமான டாக்டர் சி விஜயபாஸ்கர் சென்னையில் தங்கியிருந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலையில் அவரது தந்தையார் சின்னத்தம்பி மற்றும் அவரது தாயார் அம்மாக்கண்ணு ஆகியோர் வீட்டில் இருந்தபோது, அமலாக்கத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுக்குழுவில் மதுரையில் மதுரையில் இருந்து 15 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட அளவில் உள்ள அதிமுகவினரும் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களும் வீட்டின் முன் குவிந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வேட்பாளர் தேர்வு, வேட்பு மனு தாக்கல், கட்சியினரை ஒருங்கிணைத்தல் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சு வார்த்தை என வினாடிப் பொழுதையும் வீணாக்காமல் விஜயபாஸ்கர் செயல்பட வேண்டிய நேரத்தில் இப்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் ரேட் நடத்திக் கொண்டிருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு உள்ளிட்ட அமலாக்கத்துறை நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சகோதரர் விஜயபாஸ்கர் அவர்கள் இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம், எனக் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.