நில மோசடி வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தனது மனைவி மற்றும் மகள் ஆகியோரை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி புகார் அளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 1 மாதமாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் சிபிசிஐடி போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். கரூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று மதியம் 2 மணிக்கு அவரை அழைத்து வந்தனர்.அங்கு அவரிடம் நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவருக்கு கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது.
மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை நேற்று இரவு போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி பரத்குமார், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும், அவருடன் கைது செய்யப்பட்ட பிரவீன் கரூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
100 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.