லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை நிறைவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லத்திற்கு வந்து அவரை சந்தித்து பேசினர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் கோவையில் 10 இடங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.
சுமார் 9 மணிநேரம் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் எஸ்பி வேலுமணி பேசியதாவது :- மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் வகையில் அரசியல் காழ்புணர்ச்சியால் நடந்தது என்றும், தொடர்ந்து காவல்துறையை தவறான முறையில் திமுக பயன்படுத்துகிறது எனக் கூறினார். மேலும், இந்த சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்றும், ஸ்டாலின் என்னை மிரட்டிப் பார்க்க நினைத்தால் முடியாது எனக் கூறிய அவர், ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடிக்கும் மேல் அமைச்சர்களிடம் ஸ்டாலின் குடும்பம் வாங்கியுள்ளதாகக் கூறினார்.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை நிறைவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லத்திற்கு வருகை புரிந்தனர். முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம், ஆர் பி உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜய்பாஸ்கர், தங்கமணி ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் சோதனை குறித்து எஸ்.பி. வேலுமணியிடம் கேட்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து, சோதனையின் போது போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்த அதிமுக மகளிர் அணியை சேர்ந்த இருவர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் கோவை குனியயமுத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களை எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.