நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கு பயிற்சி தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளையின் ஆண்டுவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வுக்கான பயிற்சி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றார். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும் என கூறினார்.
LKG, UKG வகுப்புகளுக்கு நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்துவது தொடர்பாக வரும் 10-ம் தேதி நிதியமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அரசாணை எண் 149 குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்
அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய்ப்பிரச்சாரம் என விளக்கமளித்த அவர், போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தால் சில இடங்களில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.
பிற இடங்களில் வழக்கம் போல் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் செயல்பாட்டில் உள்ளது. பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் குறித்து கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், பணியாளர்கள் மூலம் மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போதைப்பொருள் இல்லா வளாகங்களாக பள்ளிகள் மாற வேண்டும், மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விடுபட சிற்பி திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.