தன்னை பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக பிரபல செய்தி சேனலுக்கு எச்சரிக்கை விடுத்து பெண் சாமியார் அன்னபூரணி ஆவேசமாக வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அண்மையில் அன்னபூரணி அரசு அம்மா என்னும் பெண் சாமியார் பிரபலமாக பேசப்பட்டு வந்தார். சினிமாவில் வரும் அம்மனை போல தலையில் கிரீடம் வைத்து தனது சீடர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
சுதந்திர தினத்தன்று அம்மன் வேடம் பூண்டு ஆசிரமத்தில் அருளாசி வழங்கியது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இவரது செயலை விமர்சித்தும், கிண்டலடித்தும் பல்வேறு செய்தி சேனல்கள் அதனை செய்தியாக வெளியிட்டன.
இதனை பார்த்து கோபமடைந்த அன்னபூரணி, சம்பந்தப்பட்ட செய்தி சேனலை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது :- ஒரு நியூஸ் சேனலில் இருந்து போன் செய்தீர்கள் என்பதால் தான், மதிப்பு கொடுத்து , பொறுமையாக பதில் கொடுத்தேன். ஒளிபரப்பினால், அதை முழுமையாக ஒளிபரப்புங்கள்; அதை விட்டு விட்டு உங்களுக்கு தேவையானதை எடிட் செய்து ஒளிபரப்புகின்றனர். நீங்கள் கேள்வி கேட்ட விதத்திலேயே உங்கள் தரம் மக்களுக்கு தெரிந்திருக்கும்.
ஒரு நியூஸ் சேனல் மாதிரியா கேள்வி கேட்குறீங்க, ஒரு நியூஸ் சேனல் மாதிரியா அதை ஒளிபரப்பு பண்றீங்க. ஆரம்பத்திலிருந்தே அவதூறாக தான் சித்தரித்து போடுறீங்க. எல்லா சேனலும் தான் தர்ஷன நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். நடப்பதை தான் ஒளிபரப்பு செய்கிறார்கள்.
ஆனால், நீங்கள் மட்டும் தான் நேரில் வந்து கண்ணால் பார்த்து. எடுத்துட்டு போய் தவறா தான் சித்தரித்து போடுறீங்க. நீங்க அவதூறா போட்ட அத்தனை செய்திக்கும் காலம் பதில் சொல்லிவிட்டது. நான் ஏற்கனவே சொன்னது தான், இயற்கை எதற்காக வந்ததோ, அதன் வேலையை நிறைவேற்றி தான் போகும். அதை யாரும் எதிர்த்து போராட முடியாது. அந்த இயற்கையை உணர ஒரு தகுதி வேண்டும். எல்லாரும் அதை உணர முடியாது. இன்னும் இயற்கை அதற்கான பதிலை தரும். அதற்கு ரொம்ப காலம் ஆகாது, கூடிய விரைவில் விரைவில் பதில் சொல்லும்.
இனி அந்த சேனலுக்கு என் ஆசிரமத்தில் அனுமதியில்லை. எதற்குமே என் ஆசிரமத்திற்குள் அந்த சேனல் வர முடியாது. இன்னும் சில யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. அவர்களுக்கு ஆன்மிகத்தை பற்றி ஒரு மண்ணும் தெரியாது. அங்கே வந்து, நடக்கிற பக்தி பூர்வமான நிகழ்வில் கலந்து கிட்டு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில்லை. இருக்கிற இடத்தில் இருந்து, எங்கள் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்களை எடுத்து, பின்னணி குரல் கொடுத்து ஒளிபரப்புகிறார்கள். அவர்கள் எல்லாம் தெருவில் போகும் நாய்களுக்கு சமம். அதுகளுக்கு பதில் அளிப்பதே வேஸ்ட், எனக் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
This website uses cookies.