கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட செல்லாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், ஹாசினி என்ற 8 மாத குழந்தையும் உள்ளனர்.
இந்த சூழலில் தமிழரசியின் சகோதரியான தனலட்சுமிக்கும், அவரது கணவர் சத்குருவுக்கும் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால், அவர் தனது குழந்தையை எடுத்துக் கொண்டு தனலட்சுமி வீட்டிற்கு வந்து வசித்து வந்துள்ளார். மேலும், சத்குருவின் மீது தனலட்சுமி போலீசிலும் புகார் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், மனைவியின் மீது கோபத்தில் இருந்த சத்குரு, இன்று திடீரென தமிழரசியின் வீட்டுக்கு வந்து தனலட்சுமியுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது, தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனலட்சுமி மற்றும் அவரது குழந்தையின் மீது ஊற்றி தீவைத்துள்ளார். இதனை தடுக்கச் சென்ற தமிழரசி, தமிழரசியின் குழந்தை ஹாசினி மற்றும் சத்குருவின் மீதும் அந்த பெட்ரோல் விழுந்ததாக சொல்லப்படுகிறது.
இதில் தமிழரசி, தமிழரசியின் குழந்தை ஹாசினி, தனலட்சுமி, தனலட்சுமியின் 4 மாத குழந்தை மற்றும் சத்குரு என 5 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும், அந்த வீட்டில் உள்ள இருவர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.