சென்னை அருகே பிரபல ரவுடி நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அயப்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடியான சந்தீப்குமார் (30) மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொலை, அடிதடி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நேற்று மாலை அண்ணாநகர், மடுவாங்கரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அங்கு, உறவினர்களிடம் பேசிவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.
இதனைக் கண்ட 10 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து, அரிவாள், பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்ட முயன்றது. இதனால், அதிர்ந்து போன அவர், தன்னை யாராவது காப்பாற்றுமாறு அலறி கூச்சலிட்டு நடுரோட்டில் ஓடியுள்ளார். ஆனால், யாரும் உதவ முன்வராததால், அந்த மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது.
அதில், படுகாயமடைந்த சந்தீப் குமார் ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அங்கிருந்து அந்த மர்ம கும்பல் ஓட்டம் பிடித்தது. இது குறித்து தகவலறிந்த அண்ணாநகர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சந்தீப்பின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 2018ல் ரவுடி ஆதித்யா என்பவரை கொலை செய்த வழக்கில் சிறை சென்று விட்டு வெளியே வந்த சந்தீப் குமாரை பழிக்குபழி தீர்க்க இந்தக் கொலை நடந்ததா..? அல்லது நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட மோதலின் காரணமாக இந்த கொலை அரங்கேற்றப்பட்டதா..? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.