விவசாயிகளுக்கு அநீதி நடந்து வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சி தலைவர்களான கேஎஸ் அழகிரி, கே.பாலச்சந்திரன், திருமாவளவன் உள்ளிட்டோர் எங்கே போனார்கள் என்று பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை உள்ளிட்ட கிராமங்களில், சிப்காட் விரிவாக்கத்திற்காக அரசு சார்பில் சுமார் 3,600 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. அரசின் இந்தப் பணிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், கோட்டாட்சியரை சந்தித்து முறையிட, பேரணியாக சென்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.
இதை கண்டித்து சாலை மறியல் நடைபெற்ற நிலையில், கைது செய்யப்பட்டவர்களை விடுவித்த போலீசார், கடந்த 4ம் தேதி நள்ளிரவில் சிப்காட் எதிர்ப்பு போராட்டக் குழு பிரதிநிதிகள் உள்ளிட்ட 20 பேரை கைது செய்து வேலூர், புழல், பாளையங்கோட்டை, கடலூர் உள்ளிட்ட சிறைகளில் அடைத்தனர்.
இதனிடையே, போராட்டக் குழு பிரதிநிதிகளான பச்சையப்பன், தேவன், அருள், திருமால், சோழன் உள்ளிட்ட 7 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டதைக் கண்டித்து பாஜக சார்பில் நாளை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளளது.
இந்த நிலையில், விவசாயிகளுக்கு அநீதி நடந்து வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சி தலைவர்களான கேஎஸ் அழகிரி, கே.பாலச்சந்திரன், திருமாவளவன் உள்ளிட்டோர் எங்கே போனார்கள் என்று பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- எட்டு வழி சாலை, நெடுவாசல் விவகாரங்களில் துள்ளிக்குதித்து கொந்தளித்த கேஎஸ் அழகிரி, கே.பாலச்சந்திரன், திருமாவளவன், வேல்முருகன், முத்தரசன் ஆகிய அனைவரும் இப்போது திருவண்ணாமலையில் அமைதியாக போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்த போது காணவில்லை, எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.