தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சரை தொடந்து திமுக எம்.பி. டி.ஆர். பாலுவும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
நோட்டீஸ் அனுப்பியும் அண்ணாமலை மன்னிப்பு கேட்காததாலும் அடிப்படை ஆதாரமின்றி அவதூறு கருத்துக்களை வெளியிடுவதாகவும் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17-வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, டி.ஆர் பாலு என்மீது வழக்கு தொடர்ந்திருப்பது நகைப்புக்குரியது. என் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பேன். வழக்குகளுக்கு பயந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்த மாட்டேன்.
அமைச்சர் டிஆர்பி ராஜாவின் குடும்பத்தினர் பெரிய நிறுவனங்களை நடத்தி வருவதால் அவருக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பிடிஆர் ஆடியோவை வெளியிட்டது தொடர்பாக என்மீது வழக்கு தொடருங்கள். வழக்கு தொடர்ந்தால் ஆடியோவின் உண்மை தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும்.
ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாக நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிப்பு. பால் விலையை புதிய அமைச்சர் குறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆடியோ விவகாரம் தொடர்பாக பிடிஆர் துறை மாற்றப்பட்டது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.